பர்சனல் டைரியில் பாக்., குறிப்புகள்.! உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய நெட்வொர்க்..!
பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்றுவந்துள்ளார். 3 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு செல்லும் போதெல்லாம் அவர், ராணுவ அதிகாரிகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசத்தில் இருந்து 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஹரியானாவை சேர்ந்த பிரபல யு டியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர். இவர்களுக்கு, டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவர் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஊடகங்களில் பிரசாரம் செய்வது; நமது ராணுவத்தின் தகவல்கள், முக்கிய இடங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அளிப்பது போன்ற உளவு வேலைகளை பார்த்துள்ளனர்.
இவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஜோதி மல்ஹோத்ராவின் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி NIA, IB மற்றும் ஹரியானா போலீசார் விசாரித்து வருகிறது. இதில், பல உண்மைகள் தெரியவந்தன. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்துள்ளார். பயங்கரவாதிகளின் மையமாக திகழும் பாகிஸ்தான்– ஆப்கானிஸ்தான் எல்லை வரை தொடர்புகளை ஜோதி ஏற்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?
ஊடகங்களில் செல்வாக்குள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தந்து, உளவு பார்க்கும் வேலைக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயன்படுத்தி கொண்டுள்ளது. அந்த வலையில்தான் ஜோதியும் சிக்கியுள்ளார். ஜோதிக்கு யுடியூபில் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், இன்டாகிராமில் 1.32 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உளவு பார்க்கும் வேலை தவிர, இந்தியர்களிடையே பாகிஸ்தாஸ் பற்றி பாசிட்டிவ் பிம்பத்தை உருவாக்கும் வகையில் பிரச்சாரம் செய்யும் பணியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த டேனிஷ் உடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகள் பற்றி, ஜோதி மல்ஹோத்ரா ஆரம்பத்தில் மறுத்தார். அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில், டேனிஷ் உடன் சேட்டிங் செய்த மெசேஜ்களை அவர் டெலிட் செய்து இருந்தது தெரிந்தது.
அதுபோல், பாகிஸ்தான் ஏஜென்ஸிகளிடம் இருந்தும் ஜோதிக்கு ரகசிய உத்தரவுகள் வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மொபைல் போன் தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஜோதி மல்ஹோத்ரா சென்றுவந்துள்ளார். 3 முறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு செல்லும் போதெல்லாம் அவர், ராணுவ அதிகாரிகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2014 மே மாதம், பாகிஸ்தானில் பைசாகி திருவிழா செய்தி சேகரிக்க சென்ற ஜோதி, திருவிழா முடித்து 20 நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார். இந்தியா திரும்பிய 1 மாதத்திற்கு பிறகு சீனா சென்றுள்ளார். பாகிஸ்தானில் இருந்தபோதே, அவரது சீன பயணம் திட்டமிடப்பட்டதா? அது பாகிஸ்தான் ஏஜென்சிகளின் அசைன்மென்ட்டா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பாகிஸ்தான் விசிட் பற்றி ஜோதியின் பர்சனல் டைரியில் சில குறிப்புகள் உள்ளன.
அதில், பாகிஸ்தானியர்களிடம் இருந்து நிறைய அன்பு கிடைத்தது. எல்லைகளை தாண்டிய இந்த தூரங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கு தெரியும். இதயங்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒரே மண்ணை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு குறிப்பில், இந்தியர்கள் குருத்வாராக்கள் மற்றும் கோயில்களுக்குள் நுழைய பாகிஸ்தான் அனுமதி அளிக்கிறது. அவர்கள் கோயில்களை பாதுகாக்கிறார்கள். 1947 பிரிவினையின்போது பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைய முடியும் என எழுதி இருக்கிறார். ஜோதி மல்ஹாத்ரா காஷ்மீரில் பஹல்காம் மட்டுமின்றி குல்மார்க், தால் ஏரி, லடாக் மற்றும் பாங்காக் ஏரியிலும் வீடியோக்கள் எடுத்துள்ளார்.
அவற்றை ஆராய்ந்து வரும் அதிகாரிகள், அவை பயங்கரவாதிகளுக்கு ஏதனும் வகையில் உதவியதா? அல்லது யாராவது உத்தரவின்பேரில் அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதா என ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் ஆய்வு செய்கின்றனர். மிக முக்கிய இடங்களான பதான்கோட், நாது லா பாஸ், அருணாச்சல பிரதேசத்தின் சில இடங்கள் தொடர்பான வீடியோக்கள் அதிகாரிகள் கவனத்தை ஈர்த்துள்ளன. எல்லை பாதுகாப்பு படையினரின் நடமாட்டம், ரேடார் லொக்கேசன்கள் தொடர்பான வீடியோக்களும் அதில் உள்ளன.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் அப்டேட்.. பாக்.-ஐ தோலுரிக்கும் பயணம்.. உலக நாடுகளுக்கு புறப்பட்ட கனிமொழி..!