திமுக வேட்பாளர் வீட்டு கொள்ளையில் டுவிஸ்ட்.. மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட மருமகள்... ரகசிய காதலுடன் கைது...!
திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட அவரின் மருமகள் மற்றும் ரகசிய காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் திமுக வேட்பாளரின் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரின் மருமகளே கைது செய்யப்பட்டுள்ளார். ரகசிய காதலனுடன் சேர்ந்து நகைகளை அள்ளிச் சென்றவர் வசமாக சிக்கியது எப்படி?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாச்சலபுரத்தை சேர்ந்தவர் கடற்கரை ராஜ். இவர் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் சாத்தூர் தொகுதியில் களம் கண்டுள்ளார். கடந்த 14ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்கு சென்றதால் வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். அதனை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அத்துடன் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபர் சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக சரணடைந்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த ஆரோக்கிய ஜான் பாஸ்கோ என்பது தெரிய வந்தது. 40 வயதான இவர் மீது கொலை
இதையும் படிங்க: திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் நகை கொள்ளை..!! பரப்புரைக்கு சென்றபோது துணிகரம்..!!
கொள்ளை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 44 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பின்னர் ஆரோக்கிய ஜான் பாஸ்கோவை சாத்தூர் நகர போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டன. அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுக வேட்பாளரின் வீட்டில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்திற்கு அவரின் மருமகளே மூளையாக செயல்பட்டது அம்பலமாக இருக்கிறது. திமுக வேட்பாளர் கடற்கரை ராஜின் மூத்த மகனான வினோத்குமார் என்பவரின் மனைவி அபிநயா. வினோத், அபிநயா தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அபிநயா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் தனது தோழி பவானி என்பவரின் கணவரான சுரேஷ் குமாருடன் திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அபிநயா திருமணத்தின் போது சீர்வரிசையாக கொண்டு வந்த 35 சவர நகைகளை திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் திருப்பி கொடுக்க மறுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அந்த நகைகளை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அவர் வில்லங்கமாக யோசித்துள்ளார். இதற்காக தனது தோழி பவானியின் கணவர் சுரேஷ் குமாருடன் சேர்ந்து கூட்டு சதியில் இறங்கி உள்ளார்.
இறுதியாக திமுக வேட்பாளரின் வீட்டில் ஆளில்லாத நிறத்தில் உள்ளே இறங்கி மொத்த நகைகளையும் ஆட்டையை போட திட்டமிட்டனர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்து கொண்டு மாற்று வழியை தேர்ந்தெடுத்துள்ளன. இதனை எடுத்து வேறு ஒருவரின் மூலம் சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆரோக்கிய ஜான் போஸோவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நகைகளை கொள்ளையடித்து கொடுத்தால் அவருக்கு குறிப்பிட்ட அளவில் பணம் கொடுப்பதாக டீலிங் போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் பரப்புரைக்கு சென்ற நேரத்தில் போஸ்கோ தனது கூட்டாளியுடன் சேர்ந்து நகைகளை திருடியது விசாரணையில் அம்பலமாக இருக்கிறது.
இதனை அடுத்து கடற்கரை ராஜின் மருமகள் அபிநயா மற்றும் பவானி, சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேரும் போலீஸ் வலையில் சிக்கி உள்ளனர். அவர்களிடமிருந்து 122 சவரன் நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் இருவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன. திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்ட அவரின் மருமகள் மற்றும் ரகசிய காதலன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!