பிரதமர் மோடி விவரமானவர்!! குறைச்சு மதிப்பிட கூடாது! பாஜகவுக்கு திடீர் பரிவு காட்டும் திமுக எம்.பி திருச்சி சிவா!!
''பிரதமர் மோடி மிகவும் விபரம் தெரிந்தவர். நான் அவரை குறைத்து பேச மாட்டேன்,'' என தி.மு.க., - எம்.பி., சிவா புகழ்ந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட அணுகுமுறையை பாராட்டி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உருக்கமாக பேசியுள்ளார். "பிரதமர் மோடி மிகவும் விபரம் தெரிந்தவர். அவரை நான் எப்போதும் குறைத்து பேச மாட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருச்சி சிவா கூறியதாவது: "கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியில் இருக்கிறேன். ஹிந்தி எனக்கு தெரியாது. ஆங்கிலத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறேன். நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வரும்போது, அங்கிருப்போர் அனைவரையும் பார்த்து 'நமஸ்கார்' என்று வாழ்த்துவார்.
ஆனால் என் அருகில் வரும்போது மட்டும் 'வணக்கம் சிவா' என்று அழகான தமிழில் வணக்கம் சொல்வார். அவர் சாதாரணமானவர் அல்ல. மிகவும் விபரம் தெரிந்தவர். அவரை குறைத்து பேச மாட்டேன்."
இதையும் படிங்க: உயிர்தியாகம் செய்த துணிச்சலான வீரர்கள்!! தியாகத்தை பாராட்டிய பிரதமர் மோடி! புல்வாமா தாக்குதல் நினைவு நாள்!!
மேலும் அவர் கூறியது: "எம்.பி.க்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களோ, அந்த மாநில மொழியில் வாழ்த்து செய்தி அனுப்புவார் பிரதமர். எனக்கு குஜராத்தியில் நன்றி கடிதம் அனுப்பினேன்.
பின்னர் அவரை சந்திக்கும்போது கைகுலுக்கியபடி 'குஜராத்தியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தீர்கள்; மகிழ்ச்சி' என்று சொல்வார். 'அதே மகிழ்ச்சிதான், நீங்கள் தமிழில் வாழ்த்து அனுப்பியபோது எனக்கு இருந்தது' என்று பதிலளிப்பேன். அவரவர் தாய்மொழி அவரவருக்கு முக்கியம். அப்படியிருக்கும்போது ஏன் ஹிந்தி திணிக்க வேண்டும் என்ற கேள்விதான் என்னுடையது."
இந்த பேச்சு தமிழ் மொழி மரியாதை, தாய்மொழி பெருமை ஆகியவற்றை வலியுறுத்துவதாக உள்ளது. பிரதமர் மோடியின் தமிழ் வாழ்த்து பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையேயும் தனிப்பட்ட மரியாதை இருப்பதை இது காட்டுகிறது.
திருச்சி சிவாவின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மொழியின் மதிப்பை உணர்த்தும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைவரும் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்ற செய்தியை இது வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் முழக்கம்! மக்களவை முடக்கம்!! ராகுல்காந்தி பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்!