VOTER ID இல்லையா..?? ஆனா நீங்களும் ஓட்டு போடலாம்..!! இது இருந்தா போதுமாம்..!!
வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி (வியாழக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இத்தேர்தலில் வாக்களிக்கும் முன் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (எபிக் கார்டு) பெற்ற அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடியில் அதை காட்ட வேண்டும். இந்த அட்டை இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க பின்வரும் மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்:
இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் கெடுபிடி..! வளைகுடா நாடுகளில் வேலை இழந்த மக்களுக்கு துயரம்.! MP சு. வெங்கடேசன் கண்டனம்..!
- ஆதார் அட்டை
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGA) பணி அடையாள அட்டை
- புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்
- ஆயுஷ்மான் பாரத் அல்லது தொழிலாளர் நலத்துறை மருத்துவ காப்பீட்டு அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- பான் கார்டு (வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை)
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் வழங்கப்பட்ட திறனட்டை
- இந்திய கடவுச்சீட்டு
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- மத்திய/மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் பணியாளர்களுக்கான புகைப்பட அடையாள அட்டை
- நாடாளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமை தனித்துவ அடையாள அட்டை
மேலும், வேறு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட எபிக் கார்டு இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், வாக்காளரின் பெயர் அந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். வாக்காளர் தகவல் சீட்டு (பழைய புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வழங்கப்படும்) அச்சிடப்பட்டு, வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன் விநியோகிக்கப்படும். இது வாக்குச்சாவடியின் பெயர், தேதி, நேரம் போன்ற விவரங்களைக் கொண்டிருக்கும். ஆனால், இது அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI வாக்காளர்கள்) தங்கள் அசல் கடவுச்சீட்டை மட்டுமே அடையாளத்திற்கு பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்படாது. முக்கியமாக, எந்த அடையாள ஆவணம் இருந்தாலும், வாக்காளரின் பெயர் அந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இல்லையெனில் வாக்களிக்க முடியாது.இத்தகவல்கள் வாக்காளர்களுக்கு தெளிவு அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. வாக்குரிமையை பயன்படுத்த விரும்பும் அனைவரும் தங்கள் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல்கள் சுதந்திரமான, நியாயமான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு... தற்கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி..! போலீசுக்கு ஷாக்..!!