×
 

#REDALERT: அடுத்த 5 நாட்களுக்கு புரட்டி எடுக்கப்போகும் கனமழை... கதி கலங்கும் கடவுளின் தேசம்...!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் தொடரும் மழை கோழிகோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகளுக்கு மேலே விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது .

எதிர்வரும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கிய நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை வேகத்தில் சுழல் அடிக்கும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் வீடுகளின் மேலும் சாலைகளிலும் விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சூர் மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீடுகளுக்கு மேலே விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர் .மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதால் சாலை போக்குவரத்து ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது .

இதையும் படிங்க: தொடரும் ரெட் அலர்ட்... நீலகிரியில் 2வது நாளாக சுற்றுலா தளங்கள் மூடல் - எப்போது திறப்பு?

மூன்று நாளில் அதிக மழைப்பொழிவு காரணமாக கேரளாவில் மலையோர மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லாமல் வசிக்கக்கூடிய மக்களுக்கு நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் மழை பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக சீர் செய்யும் விதத்தில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
 

இதையும் படிங்க: நீலகிரியை சிதைக்கும் மழை.. மண் சரிவு..! முகாம்களுக்கு செல்லும் மக்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share