E20 பெட்ரோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி? பழைய வாகனங்களுக்கு E10 வருமா? BPCL தலைவர் முக்கிய தகவல்!
பழைய வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் வாகன உரிமையாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுடில்லி: எத்தனால் கலவை தொடர்பான கொள்கையில் இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், பழைய வாகனங்களுக்கு E20 பெட்ரோலுக்கு மாற்றாக E10 பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்று இதுவரை கூறப்படவில்லை என்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் கன்னா தெரிவித்துள்ளார்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடைமுறை குறித்து நாடு முழுவதும் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போது 20 சதவீத எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக பழைய வாகனங்களை பயன்படுத்தி வருபவர்களிடையே E20 பெட்ரோல் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து BPCL தலைவர் சஞ்சய் கன்னா கூறுகையில், தற்போதைய புதிய தலைமுறை வாகனங்கள் E20 பெட்ரோலில் இயங்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பழைய வாகனங்களுக்கு குறைந்த அளவு எத்தனால் கலந்த பெட்ரோலை வழங்குவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை லி.125 ரூபாயாக உயரும்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! E20 குறித்து முக்கிய விளக்கம்!
எனினும், எத்தனால் கலவை கொள்கை தொடர்பாக எந்த முடிவும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசு எதிர்காலத்தில் E10 பெட்ரோல் விற்பனை தொடர்பாக முடிவு எடுத்தால், அதை செயல்படுத்துவதில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய சிக்கல் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதுள்ள பெட்ரோல் விநியோக கட்டமைப்பை பயன்படுத்தியே E10 பெட்ரோல் விநியோகத்துக்கு மாற முடியும் என்றும் சஞ்சய் கன்னா தெரிவித்துள்ளார். ஆனால், பழைய வாகனங்களுக்காக E20 பெட்ரோலுக்கு பதிலாக E10 பெட்ரோல் விற்பனைக்கு வர உள்ளது என்று இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அதிக எத்தனால் கலவை கொண்ட E20 பெட்ரோல் பழைய வாகனங்களின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற விவாதமும் நீடித்து வருகிறது. குறிப்பாக BS-4 தரநிலை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, BS-3 தரநிலை வரை தயாரிக்கப்பட்ட சுமார் 7.50 கோடி முதல் 8 கோடி இருசக்கர வாகனங்கள் E20 பெட்ரோலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சில தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பழைய வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் வாகன உரிமையாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனினும், E20 பெட்ரோல் காரணமாக பழைய வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், பழைய வாகனங்களுக்கு தனியாக E10 பெட்ரோல் விற்பனை செய்யப்படுமா என்பது தற்போது தெளிவாகவில்லை. அரசு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகே, இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெரியவரும்.
இதையும் படிங்க: பெட்ரோல் விலை லி.125 ரூபாயாக உயரும்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! E20 குறித்து முக்கிய விளக்கம்!