கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!
மலையாள இலக்கிய உலகின் முன்னணி ஆளுமைகள் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றியதற்காக தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
கேரளா மாநிலத்தின் பெயரை அதன் பாரம்பரிய மற்றும் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் கேரளம் (Keralam) என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியதற்காக, மலையாள இலக்கிய உலகின் முன்னணி ஆளுமைகள் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துத் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
கேரளா என்ற பெயருக்கு பதிலாக, மலையாள மொழியின் ஆன்மாவோடு இணைந்த "கேரளம்" என்ற பெயரை உறுதி செய்த மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று, அம்மாநிலத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்கள் பிரதமருக்குத் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கேரளத்தைச் சேர்ந்தச் சிறந்த இலக்கியவாதிகள் குழுவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கேரளம் மற்றும் மலையாள மொழி மீதான அவர்களது தீராதப் பற்று மற்றும் அர்ப்பணிப்பை இந்த உரையாடல் பிரதிபலித்தது, அவர்களுடனானக் கலந்துரையாடல் மிகுந்த நுண்ணறிவைத் தருவதாக அமைந்தது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அரசியலமைப்பு ரீதியாகப் பெயரை மாற்றியதன் மூலம், மாநிலத்தின் சுயமரியாதை மற்றும் மொழிசார் அடையாளத்திற்குப் பிரதமர் முக்கியத்துவம் அளித்துள்ளதாக இலக்கியவாதிகள் குழுவினர் தெரிவித்தனர். சந்திப்பின் போது மலையாள மொழியின் தொன்மை, இலக்கிய வளர்ச்சி மற்றும் கேரளத்தின் தனித்துவமானக் கலை பண்பாட்டுப் பாரம்பரியங்கள் குறித்துப் பிரதமருடன் அவர்கள் விரிவாக ஆலோசித்தனர்.
இதையும் படிங்க: மதச்சார்பற்ற கல்விக்கு மாபெரும் முன்னெடுப்பு ..! கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவு!
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் போற்றும் விதமாகவும், மாநிலங்களின் கலாச்சார விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் அமைந்துள்ள இந்த கேரளம் பெயர் மாற்றம், உலகெங்கிலும் வாழும் மலையாளிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இனி 'கேரளா' இல்லை.. கேரளம்! மாநில பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்!