×
 

ஒரே மேடையில் 5 வேட்பாளர்கள்... அறிமுகம் செய்து வாக்குச் சேகரிக்கும் EPS.. . கலகலக்கும் நெல்லை..!

நெல்லையில் என் டி ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிக்கிறார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நெல்லையில் நாளை கூட்டணி கட்சி வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ஒரே மேடையில் 5 வேட்பாளர்களையும் ஆதரித்து பேசுகிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் சசிகலாவின் புதிய கட்சி உள்ளிட்ட 5 முனை போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக பாஜக மற்றும் பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை நாங்குநேரி ராதாபுரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினரை ஆதரித்து அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை 5 மணிக்கு நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க: அந்த ரூ.4 கோடி ஞாபகம் இருக்கா? நயினாருக்கு செக்..! ED விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் மனு..!!

மேலும் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார். நெல்லைக்கு அதிமுக தச்சை கணேசராஜா, அம்பாசமுத்திரத்திற்கு இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டைக்கு சுல்தான், நாங்குநேரிக்கு அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து, ராதாபுரம் தொகுதிக்கு பாஜகவில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை. 

இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய கொடூரம்... காருக்குள் ஒட்டுமொத்த குடும்பமும் செய்த பயங்கரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share