அடுத்தடுத்து நிகழும் விமான விபத்து... அவசரமாக லக்னோவில் தரை இறங்கிய விமானம்! பயணிகள் அச்சம்!
சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக தரையிறங்கும் போது தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உட்பட ஏராளமான உயிரிழந்தனர். இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இந்த கோர விபத்து விமானத்தில் பயணிப்பவர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. விமானத்தின் தரம், செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம் தொடர்பான அச்சம் இன்னும் நீங்காத நிலையில் சவுதி அரேபிய விமானத்தில் தீப்பொறி கிளம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியிலிருந்து லக்னோவுக்கு வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானத்தின் சக்கரப் பகுதியில் தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. விமானம் தரையிறங்கிய போது இந்த தொழில்நுட்பாய் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் ரூபானி இல்லை என்பதை இதயம் ஏற்க மறுக்கிறது... பிரதமர் மோடி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்!
இருப்பினும், ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்து 250 ஹஜ் பயணிகளும் லக்னோவில் பத்திரமாக தரையிறங்கியுள்ளனர். விமானத்தின் சக்கரங்கள் உரசியதால் லேசான தீப்பொறி ஏற்பட்டதாகவும், பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்ல...அமித்ஷா சொன்ன பரபரப்பு தகவல்!