விஜய் ரூபானி இல்லை என்பதை இதயம் ஏற்க மறுக்கிறது... பிரதமர் மோடி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்!
குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
குஜராத்தில் அகமதாபாத் அருகே விபத்துக்குள்ளானது. மருத்துவ விடுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்து நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார் இந்த விமானத்தில் தான் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணியும் பயணித்திருந்தார். 241 பேர் உயிரிழந்த நிலையில் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
2016 முதல் 2021 வரை குஜராத் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான இவர், ராஜ்கோட் மேற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும், 2006-2012 வரை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தவர். அவர் தனது மகளைச் சந்திக்க லண்டனுக்கு பயணித்தார், மேலும் விமானத்தில் வணிக வகுப்பில் (Z class, இருக்கை எண் 12) பயணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: "உனக்கு ஆயுசு கெட்டிப்பா".. மரணத்தை வென்றவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!
விஜய் ரூபானியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, விஜய்பாய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். விஜய்பாய் இனி நம்முடன் இல்லை என்பதை என் இதயம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்களுடன் எனக்கு பல வருடங்களாக உறவு இருக்கிறது. பல சவாலான காலங்களில் நாங்கள் தோளோடு தோள் நின்று பணியாற்றியுள்ளோம் என கூறினார்.
எளிமையான மற்றும் எளிமையான சுபாவத்தைக் கொண்டிருந்த விஜய்பாய், மிகவும் கடின உழைப்பாளியாகவும், கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாகவும் இருந்தார். ஒரு அடிமட்ட ஆர்வலராக பொது வாழ்வில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்துக்கொண்டே குஜராத்தின் முதலமைச்சராக உயர்ந்தார் என புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: லண்டன் போய் போன் பண்ணுப்பா சொன்னேன்... என் மகனே போயிட்டான்! கதறி துடிக்கும் தாய்...