மீண்டும் திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகள்..!! மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!
பள்ளி -கல்லூரி திறப்பையொட்டி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நீண்ட கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், வரும் ஜூன் 4, 2026 அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீண்டும் செயல்படத் தொடங்க உள்ளன. இதையொட்டி கல்வித் துறை சார்பில் பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கல், வகுப்பறை ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல் தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களும் அடுத்த சில நாட்களில் மாணவர்களை வரவேற்கத் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் நேரடி உத்தரவின்பேரில், 2026-27 கல்வியாண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். இந்த சலுகை மாணவர்களின் கல்விப் பயணத்தை எளிதாக்குவதோடு, குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களின் பொருளாதார சுமையை கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பஸ் பாஸ்: பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளி சீருடையில் இருக்கும் போது, வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் மற்றும் திரும்பும் போது எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கென ஒவ்வொரு பள்ளியிலும் புதிய கட்டணமில்லா பயண அட்டைகள் (பஸ் பாஸ்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பயண தூரம் மற்றும் கல்வியாண்டு கால அளவை கருத்தில் கொண்டு இந்த அட்டைகள் வழங்கப்படும். இந்த நடைமுறை மாணவர்கள் தினசரி பயணத்தில் எவ்வித சிரமமும் இன்றி பள்ளிக்கு வந்து செல்ல உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: அமைச்சரிடமே வசூல்..! கல்லா கட்டிய திருச்செந்தூர் அர்ச்சகர் சஸ்பெண்ட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!
கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டை அடிப்படையில் சலுகை: அரசு கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் வழங்கிய செல்லுபடியாகும் அடையாள அட்டையை பேருந்து நடத்துநரிடம் காட்டி இலவசமாக பயணிக்கலாம். இந்த வசதி அவர்களின் அன்றாட கல்லூரி நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ள உதவும். போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்குவதை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கும் வகையில் பேருந்து நிறுத்தங்களில் சரியான முறையில் நிறுத்தி, கவனத்துடன் செயல்படுமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அரசின் அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி வருகை விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பள்ளி-கல்லூரி திறப்பை முன்னிட்டு போக்குவரத்துத் துறை முழு அளவில் தயாராக இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடவுள் சொத்தில் கை வைத்தால் சும்மா விட மாட்டோம்! பூதாகரமாகும் சபரிமலை விவகாரம்! அமைச்சர் எச்சரிக்கை!