வடமாநில மாணவிக்கு நேர்ந்த கொடூரம்... தேர்வுக்கு உதவுவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர்..!!
தேர்வுக்கு உதவுவதாக கூறி வடமாநில மாணவி ஒருவரை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இரண்டு மாத குழந்தையிலிருந்து 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்றார் போல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.
உதகை அரசு மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மருத்துவம் படிக்கும் வட மாநில மாணவியை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழகம் உட்பட வெளி மாநிலங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மருத்துவ மாணவியிடம் தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி அரசு மருத்துவர் ஓம் பிரகாஷ் (44) தனியாக அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 66 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்ய முயற்சி..!! இளைஞர்கள் போதையில் அட்ராசிட்டி..!!
பின்னர் தனியார் தங்கும் விடுதியில் வைத்து யூனிவர்சிட்டியில் பேசி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஒரு கட்டத்தில் அலறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கபட்ட மாணவி உதகையில் உள்ள அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அரசு மருத்துவர் ஓம் பிரகாஷை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!