பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஏவுகணை! வாங்கி குவிக்கும் இந்தியா! வந்து இறங்க காத்திருக்கும் அரக்கன்!!
அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் ட்ரோன்களை வீழ்த்த எஸ்-400 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.
இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்பு வலுவடைந்து வருகிறது! பாகிஸ்தானுக்கு எதிரான 2025ஆம் ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் எஸ்-400 ரக ஏவுகணைகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்கள், உளவு விமானங்கள் மற்றும் ட்ரோன்களை துல்லியமாக வீழ்த்தியது இந்த ரஷ்ய ஏவுகணை அமைப்பு.
குறிப்பாக நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் உள்ள விமான தளங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் தாக்கப்பட்டன. இதனால் பயந்த பாகிஸ்தான் தனது விமானங்களை ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லை அருகே உள்ள தளங்களுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை எதிர்கொள்வதில் எஸ்-400 மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், இந்திய ராணுவம் மேலும் அதிக எஸ்-400 ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது. நேற்று (பிப்ரவரி 12, 2026) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை! ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்! ஐ.,நா-வில் வெளுத்து வாங்கிய இந்தியா!
அதன்படி 120 குறுகிய தூர ஏவுகணைகள், 168 நீண்ட தூர ஏவுகணைகள் என மொத்தம் 288 எஸ்-400 ஏவுகணைகள் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.10,000 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்முதல் ஃபாஸ்ட் டிராக் முறையில் விரைவாக நடைபெறும்.
வான்வழி தாக்குதல்களை முறியடிக்க எஸ்-400 உடன் பான்ட்சீர் (Pantsir) ஏவுகணை அமைப்புகளை இணைத்து இரு அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதனால் எதிரிகளின் ட்ரோன் மற்றும் விமான தாக்குதல்களுக்கு வலுவான பதிலடி கொடுக்க முடியும்.
இதே DAC கூட்டத்தில் மொத்தம் ரூ.3.60 லட்சம் கோடி மதிப்பிலான பெரும் கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 114 ரஃபேல் போர் விமானங்கள் (MRFA), கடற்படைக்கான P-8I நீண்ட தூர கடல் உளவு விமானங்கள், ராணுவத்துக்கான விபவ் (Vibhav) டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், போர் ஏவுகணைகள், உயர்ந்த உயர போலி செயற்கைக்கோள் (AS-HAPS) உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவை இந்திய ராணுவத்தின் போர் திறனை பெரிதும் உயர்த்தும்.
ஆபரேஷன் சிந்தூரில் எஸ்-400-இன் வெற்றி இந்தியாவின் வான்பாதுகாப்பை உலக அளவில் பேச வைத்தது. இப்போது மேலும் ஏவுகணைகள் வாங்குவது எதிரிகளுக்கு பெரும் எச்சரிக்கையாக அமையும். இந்தியாவின் தற்காப்பு வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது!
இதையும் படிங்க: இந்தியா கொடுத்த தரமான அடி! பாக்., பயங்கரவாதி அலறல்! ஆபரேசன் சிந்தூரின் மறுபக்கம்!