×
 

ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கதற விட்ட இந்தியா!! மாஸ் கட்டிய கடற்படை! ராஜ்நாத் சிங் பெருமிதம்!!

'ஆபரேஷன் சிந்தூரின் போது ஒட்டுமொத்த பாகிஸ்தான் கடற்படையையும் , அதன் துறைமுகங்களுக்குள்ளேயே இந்தியக் கடற்படை முடக்கியது,' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடற்படை வீரவணக்க பூங்காவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த ஆண்டு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்தார். அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட அந்தக் கொடூரச் சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது என்றார்.

இதையடுத்து இந்திய முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. ராணுவமும் விமானப்படையும் துல்லியமான தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை முழுமையாக அழித்தன என்று ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

மேலும், “இந்த நடவடிக்கையில் கடற்படையின் பங்கு மிக முக்கியமானது. நமது கடற்படை முழு பலத்துடன் அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த பாகிஸ்தான் கடற்படையையும், அதன் துறைமுகங்களுக்குள்ளேயே இந்தியக் கடற்படை முடக்கியது” என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!

இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் பெரும் வரலாற்றுச் சிறப்பு பெறும் என்றும், இது ஒரு சுற்றுலா மையமாகவும் உருவெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா காட்டிய வலிமை உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான அணுகுமுறையை உலகுக்கு தெளிவாக உணர்த்தியது. குறிப்பாக கடற்படையின் துணிச்சலான நடவடிக்கை பாகிஸ்தானின் கடல் எல்லையை முழுமையாக முடக்கியதாக பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கடற்படை வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வீரவணக்க பூங்கா பெரும் வரவேற்பைப் பெற்றது. ராஜ்நாத் சிங் இந்த பூங்காவை திறந்து வைத்தபோது, தேசத்துக்காக தங்கள் உயிரைத் தரும் வீரர்களுக்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

ஆபரேஷன் சிந்தூர் இந்திய பாதுகாப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நினைவுகூரப்படும் என்பதில் சந்தேகமில்லை. முப்படைகளின் இந்த ஒருங்கிணைப்பு எதிர்காலத்தில் எந்த சவாலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. 

இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share