களமிறங்குது அசூர படை!! மாஸ் காட்டப்போகும் இந்தியா!! ரூ. 3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்கள் வரப்போகுது!!
இந்திய விமானப்படையின் பல்நோக்கு போர் விமானத் திட்டத்திற்காக 114 பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.3.25 லட்சம் கோடி ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரம் ஒப்புதல் அளிக்க உள்ளது.
இந்திய விமானப்படையின் பல்நோக்கு போர் விமான தேவையை பூர்த்தி செய்ய 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரம் ஒப்புதல் அளிக்க உள்ளது. இது இந்தியாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத கொள்முதல் ஒப்பந்தமாக அமையும்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விரைவில் டெல்லி வரவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மல்டி ரோல் ஃபைட்டர் எயர்கிராஃப்ட் (MRFA) திட்டத்தின் கீழ் 114 ரஃபேல் F4 வகை விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இதில் சுமார் 100 விமானங்கள் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும். இது உயர்தர போர் விமான தொழில்நுட்ப இடமாற்றத்தை (ToT) உறுதி செய்யும். 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்தும் மிக முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
இந்தியா ஏற்கனவே 36 ரஃபேல் விமானங்களை வைத்துள்ளது. 2024 டிசம்பரில் கடைசி C வகை விமானத்தை பெற்றது. கடற்படைக்கு ரூ.63,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் M விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதில் பயிற்சி விமானங்கள், MRO (பராமரிப்பு, பழுதுபார்த்தல், மேம்படுத்தல்) ஒப்பந்தம், லாஜிஸ்டிக்ஸ் ஆதரவு ஆகியவை அடங்கும். இந்த ரஃபேல்கள் ஐ.என்.எஸ். விக்ராந்த், விக்ரமாதித்யா போன்ற விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும்.
இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய வருகை?! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தம்! களமிறங்கும் அசூரன்!!
ரஃபேல் இரட்டை என்ஜின் கொண்ட பல்நோக்கு போர் விமானம். வான்வெளி ஆதிக்கம், துல்லிய தாக்குதல் பணிகளுக்கு உலகின் சிறந்த விமானங்களில் ஒன்று. கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூரில் (பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி) ரஃபேல்கள் பயன்படுத்தப்பட்டன. ஸ்கால்ப் குரூயிஸ் ஏவுகணையை ஏவி 250 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டசால்ட் ஏவியேஷன், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இடையே 4 முக்கிய உற்பத்தி இடமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தானன. டாடா ஐதராபாத்தில் அதிநவீன ஆலை அமைத்து உடற்பகுதி பிரிவுகளை தயாரிக்கும். முதல் உடற்பகுதி 2028-இல் உற்பத்தி வரிசையில் வரும். மாதத்துக்கு 2 முழு உடற்பகுதிகள் இலக்கு. இறுதி அசெம்பிளி பிரான்ஸில் நடைபெறும்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவை பிரான்ஸ் அல்லாத நாடுகளில் ரஃபேலின் மிகப்பெரிய இயக்குநராக உறுதிப்படுத்தும். விமானப்படையின் ஸ்குவாட்ரான் எண்ணிக்கையை உயர்த்தி, பாதுகாப்பை வலுப்படுத்தும் மிக முக்கிய முடிவாக இது அமையும்.
இதையும் படிங்க: பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய வருகை?! கையெழுத்தாகும் முக்கிய ஒப்பந்தம்! களமிறங்கும் அசூரன்!!