×
 

கொளுத்தி எடுக்கும் வெயில்!! ஆரஞ்ச் அலர்ட்!! கேரளாவில் வேலை நேரம் மாற்றம்!!

கேரளாவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி 20ஆம் தேதி வரை வெப்ப அளவு தொடர்ந்து உயரும் என எச்சரித்துள்ளது. சூரியக் கதிர்வீச்சு அதிகரிப்பதால் சரும நோய்கள், வெப்ப தாக்குதல் போன்ற ஆபத்துகள் அதிகரித்துள்ளன. இதனால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது.

இந்த சூழலில் திறந்தவெளி தொழிலாளர்களை பாதுகாக்க தொழிலாளர் நலத்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், கட்டுமான தளங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 7 மணிக்குள் மொத்தம் 8 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு கீழ் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மலைப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால் அங்கு இந்த கட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூணாறு போன்ற 5000 அடி உயரத்தில் உள்ள சில இடங்களிலும் வெப்ப அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு உள்ள தொழிலாளர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் அப்செட்! செல்வப்பெருந்தகை முயற்சி டோட்டல் வேஸ்ட்! திமுக - காங்., கூட்டணியில் பெரிய ஓட்டை!

தோட்ட நிர்வாகங்கள், கட்டுமான நிறுவனங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், தலையில் தொப்பி அணிய வேண்டும், நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும் என தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடைக்காலத்தில் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெப்பம் 38 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெயிலில் அதிக நேரம் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: திருச்சியில் நாதக மாபெரும் மாநாடு..! 234 தொகுதி வேட்பாளர்களை மேடையேற்றும் சீமான்..! நேரில் ஆய்வு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share