×
 

மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

டெல்லியில் வாடிக்கையாளர்களின் பைகளை சுமந்து செல்லும் CarryMen என்ற புதிய மற்றும் வினோதமான சேவைகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பான சந்தைகளில் மணிக்கணக்கில் நடந்து ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும் வகையில் ‘கேரிமென்’ (CarryMen) என்ற புதிய சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் வாடிக்கையாளர்களுடன் சந்தைக்கு வந்து, அவர்கள் வாங்கும் அனைத்து பைகளையும் சுமந்து செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது.

லஜ்பத் நகர், சாந்தினி சௌக் உள்ளிட்ட டெல்லியின் பிரபலமான மார்க்கெட் பகுதிகளில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு கனமான பொருட்களைத் தூக்கிச் செல்லும் சிரமம் எப்போதும் உண்டு. குறிப்பாக வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் மற்றும் திருமண ஷாப்பிங் செய்யும் குடும்பங்கள் இந்த சிரமத்தை அதிகம் எதிர்கொள்கின்றனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக ‘கேரிமென்’ நிறுவனம் இந்த புதுமையான சேவையைத் தொடங்கியுள்ளது.

இந்த சேவையின் முதல் கட்டமாக லஜ்பத் நகரில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சாந்தினி சௌக், காரோல் பாக் உள்ளிட்ட மற்ற முக்கிய சந்தைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் carrymen services இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்! 

கட்டண விவரங்கள் மற்றும் வசதிகள்:

30 நிமிடங்களுக்கு ரூ.79 மற்றும் ஒரு மணி நேரத்துக்கு ரூ.149 என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு உதவியாளர் சுமார் 12 கிலோ எடை வரை பைகளை சுமக்கும் வசதி உள்ளது. பைகளை சுமப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட வரிசைகளில் நிற்க உதவுவது, வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க குடை பிடிப்பது, மொபைல் போன் சார்ஜிங் செய்வது உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் வழங்கப்படுகின்றன. நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ஷாப்பிங்கை மக்கள் இன்பமாக அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் திருமண சீசனில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை:

வாடிக்கையாளர்கள் தங்கள் பொருட்களை நம்பி ஒப்படைக்கும் வகையில், அனைத்து உதவியாளர்களும் காவல்துறை பின்னணி சரிபார்ப்பு செய்யப்பட்டவர்கள். அவர்கள் பிரத்யேக சீருடை அணிந்து, அடையாள அட்டை அணிந்திருப்பார்கள். இது பாதுகாப்பு குறித்த அச்சத்தைப் போக்கும். இந்த சேவை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே லஜ்பத் நகரில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பலரும் “கைகளில் எந்த எடையும் இல்லாமல் சுதந்திரமாக ஷாப்பிங் செய்ய முடிகிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தப் புதுமையான யோசனை டெல்லி மட்டுமின்றி பிற பெருநகரங்களுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் இத்தகைய சேவைகள் எதிர்காலத்தில் நகர வாழ்க்கையின் அங்கமாக மாறலாம்.

இதையும் படிங்க: எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share