பூமியை தாக்கப்போகும் சூரிய புயல்!! இந்தியாவுக்கு ஆபத்து? சீற்றம் அதிகரிப்பு!! இஸ்ரோ தீவிர கண்காணிப்பு!!
சூரிய புயல் பூமியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாசா, இஸ்ரோ போன்ற சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.
சூரியனில் கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் 'ஆக்டிவ் ரீஜியன் 4366' பகுதியில் நடந்த இந்த எக்ஸ்-கிளாஸ் (X-class) சூரிய வெடிப்பு மிக அதிக வலிமை வாய்ந்தது. இதனால் பூமியின் அயனோஸ்பியர் வளிமண்டலம் பாதிக்கப்பட்டு, ரேடியோ அலைகள் துண்டிப்பு, ஜிபிஎஸ் சிக்னல் இடையூறு, செயற்கைக்கோள்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய புயல்கள் A, B, C, M, X என ஐந்து வகைகளாக பிரிக்கப்படுகின்றன. A, B, C வகைகள் சிறியவை, பூமியில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் M மற்றும் X வகை சூரிய புயல்கள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக X-கிளாஸ் வெடிப்பு ஏற்படும்போது ரேடியோ சிக்னல்கள் துண்டிக்கப்படலாம், செயற்கைக்கோள்கள் சேதமடையலாம், மின்சார கட்டமைப்புகள் முடங்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 4 நாட்களாக தொடர்ந்து எக்ஸ் வகை சூரிய சீற்றங்கள் நிகழ்ந்து வருவதால் இந்தியாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!
ரேடியோ அலைகள் பாதிக்கப்பட்டால் டிவி ஒளிபரப்பு, விமான சேவை, கப்பல் போக்குவரத்து, ஜிபிஎஸ் சேவைகள் உள்ளிட்டவை தடைபடலாம் என்று இஸ்ரோ எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் பிரிவு இயக்குனர் அனில் குமார் கூறுகையில், “சூரிய புயலால் ரேடியோ அலைகள் அல்லது செயற்கைக்கோள்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய அவசரத் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா-எல்1 சூரிய கண்காணிப்பு விண்கலம் இதுபோன்ற சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை வழங்குவதற்காக இயக்கப்படுகிறது. நாசா, இஸ்ரோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து சூரிய செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றன. இந்த சூரிய வெடிப்பு பூமியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!