×
 

திருச்சியில் மாபெரும் திமுக மாநாடு.. எதிரிகளுக்கு ஒரே நடுக்கம்... முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!

திருச்சியில் திமுகவின் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு மடல் கொடுத்துள்ளார்.

திருச்சியில் திமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம் திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தலைமைக் கழகம் தொடங்கி, கிளைக்கழகங்கள் வரையிலான, கழகத்தின் அனைத்து அணிகளையும் உள்ளடக்கிய ஏறத்தாழ பத்து இலட்சம் நிர்வாகிகள் கூடுகின்ற பெருவிழாவாகத் திருச்சி சிறுகனூரில் மார்ச் 9 அன்று கழக மாநாடு நடைபெறவிருக்கிறது என்று தெரிவித்தார். 

கழகம் என்றாலே குடும்பம் என்றுதான் எனவும் அதுதான் நமக்கு பெருமை என்றும் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் எதிரிகளுக்கு வயிறு எரியச் செய்யும் பொறாமை என்று தெரிவித்தார். 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே என்றும் கூறினார்.

உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம். அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூட இருப்பதாக தெரிவித்துள்ளார். களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும் போது எதிரிகள் நடுங்குவது இயல்பு தானே என்றும் தெரிவித்துள்ளார். நம்முடைய கூட்டணி உடையாதா என்று அரசியல் எதிரிகள் ஏங்கிக் கிடந்தார்கள் என்றும் ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்து விடலாம் என முயற்சி செய்தார்கள் என்றும் அவர்கள் கற்பனையை ரசித்தபடி பயணித்ததாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எங்க நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரும்... அமைச்சர் அன்பில் மகேஷ் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!

கூட்டணி உடையும் என கனவில் கணக்கு போட்டு கற்பனை கோட்டைகளை கட்டிக்கொண்டு இருந்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். எதிர்க்கட்சிகளின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நம் பணியை மேற்கொண்டோம் என்று கூறிய அவர் , 5 ஆண்டுகால ஆட்சியின் நிறைவில், ஓரணியில் தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆகிய பெயர்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களின் ஆதரவைத் திரட்டுகின்ற பணியை எவ்வித எதிர்ப்புமின்றிக் கழக உடன்பிறப்புகளால் மேற்கொள்ள முடிகிறது என்பதே திராவிட மாடல் நல்லாட்சிக்கான சாட்சி என்றார். திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே., உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன் இன்று முதல்வர் ஸ்டாலின் அன்புடன் அழைப்பு விடுத்தார் 

இதையும் படிங்க: திருச்சி ரயில்வே கோட்ட கல்வெட்டு..! இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share