×
 

பிரமாண்ட வரவேற்பு ரெடி!! ஆவலோடு காத்திருக்கேன்! இந்தியா வருமாறு தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

தாரிக் ரஹ்மான் குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். பிரமாண்ட வரவேற்று உங்களுக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியுள்ளது. பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் கட்சி (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் (வயது 60) இன்று (பிப்ரவரி 17, 2026) பிரதமராக பதவியேற்றார். கடந்த வாரம் நடந்த தேர்தலில் BNP பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. இதனால், 2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்குப் பிறகு புதிய அரசு அமைந்துள்ளது.

தாரிக் ரஹ்மான் BNP தலைவர் காலிதா ஜியாவின் மகனும், முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மகனுமாவார். தேர்தலில் BNP 209 இடங்களையும், ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களையும் கைப்பற்றியது. தாரிக் ரஹ்மான் மற்றும் 49 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் முன்னிலையில் தெற்கு பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்றது. இந்த விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார்.

பதவியேற்பு விழாவுக்குப் பிறகு ஓம் பிர்லா தாரிக் ரஹ்மானை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி எழுதிய வாழ்த்து கடிதத்தை வழங்கினார். கடிதத்தில் மோடி, “இரு நாடுகளும் பகிர்ந்த வரலாறு, கலாச்சார உறவுகள், அமைதி மற்றும் செழிப்புக்கான மக்கள் ஆசைகளின் அடிப்படையில் ஆழமான நட்பு கொண்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு! பிரதமர் மோடிக்கு அழைப்பு?! கடைசியில் ட்விஸ்ட்?!

வளர்ச்சி முன்னுரிமைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது எதிர்கால ஒத்துழைப்பை வழிநடத்தும் என்றும், இணைப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி, எரிசக்தி, சுகாதாரம், மக்களிடையே பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் உறவுகளை விரிவுபடுத்த நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தாரிக் ரஹ்மான் தனது மனைவி டாக்டர் ஜுபைதா ரஹ்மான் மற்றும் மகள் ஜைமா உடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். “பிரமாண்ட வரவேற்பு உங்களுக்காக காத்திருக்கிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு உதவும் வகையில் ஒன்றாக பணியாற்ற முடியும்” என மோடி கூறியுள்ளார்.

இந்த அழைப்பு இந்தியா-வங்கதேச உறவுகளை புதுப்பிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு பொருளாதார ஸ்திரத்தன்மை, சட்ட ஆட்சி, மக்கள் நலனை மையமாகக் கொண்டு செயல்படும் என அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு மேலும் வலுப்படுமா என உலகம் உற்று நோக்குகிறது.

இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்க!! எங்ககிட்ட கொடுத்திருங்க! வங்கதேச புதிய அரசு இந்தியாவுக்கு வைக்கும் டிமாண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share