வெறி பிடிச்ச பாஜக... தமிழ் ஓட்டுக்கு! சமஸ்கிருதம் நோட்டுக்கா? சு.வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு..!
சமஸ்கிருத மொழிக்கு மட்டும் 2532.59 கோடி நிதி ஒதுக்கி உள்ளது பாஜகவின் அப்பட்டமான மேலாதிக்க வெறி என எம் பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மொழி மேம்பாட்டு நிதியில் சமஸ்கிருதத்திற்கு பெரும் பங்கு கிடைத்துள்ள ஆர்டிஐ தரவு தொடர்பான செய்தியை சுட்டிக்காட்டி எம்.பி. சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு மற்ற ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்குச் செலவிட்ட தொகையை விட 17 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளது. 2014-15 மற்றும் 2024-25 க்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 2532.59 கோடியை செலவிட்டுள்ளது, இது மற்ற ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கான மொத்த செலவினமான 147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விண்ணப்பம் மற்றும் பொது பதிவுகளிலிருந்து தெரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சமஸ்கிருதத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 230.24 கோடியும், மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 13.41 கோடி செலவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளில் அதிக நிதியுதவியைப் பெறும் தமிழ், சமஸ்கிருதத்தின் மொத்த நிதியுதவியில் 5% க்கும் குறைவாகவும், கன்னடம் மற்றும் தெலுங்கு தலா 0.5% க்கும் குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம் தலா 0.2% க்கும் குறைவாகவும் பெற்றன.
இதையும் படிங்க: அதிகாரப் போருக்கு அப்பாவி மக்களே காவு.. தமிழர்களை விரைந்து மீட்டு வாருங்கள்! சீமான் வலியுறுத்தல்..!
2004 ஆம் ஆண்டில் "செம்மொழி" என்று அறிவிக்கப்பட்ட முதல் மொழியான தமிழ், இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான மானியங்கள் GPIL திட்டத்தின் கீழ் 113.48 கோடி ரூபாயைப் பெற்றது, இது 2005 ஆம் ஆண்டில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகையை விட 22 மடங்கு குறைவு என சுட்டிக்காட்டி உள்ளது. 2008 மற்றும் 2014 க்கு இடையில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற மீதமுள்ள நான்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியாவின் ஒருங்கிணைந்த நிதி 34.08 கோடி.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 1.2 பில்லியன் மக்கள்தொகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னடம் பேசுபவர்கள் 21.99% இருந்தனர். சமஸ்கிருதம் பேசுபவர்களின் விகிதம் மிகக் குறைவு. இந்தி பேசுபவர்கள் அந்த மொழியைத் தங்கள் தாய்மொழியாகப் பட்டியலிட்டவர்கள் 43.63% பேரும், உருது பேசுபவர்கள் 4.19% பேரும் இருந்ததாக கூறி உள்ளது.
பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எம். பி. சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி என்று குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: அவருக்கு இங்கிலீஷ் மேல பயம் இல்ல.. விஷயமே வேற! போட்டு உடைத்த அன்பில் மகேஷ்!!