×
 

நல்லெண்ண எம்.பி.க்கள் குழு.. மலிவான அரசியல் விளையாட்டில் பாஜக.. புட்டுப் புட்டு வைத்த காங்கிரஸ்.!!

முக்கியமான தேசிய பிரச்சினையில் மத்திய பாஜக அரசு மலிவான அரசியல் விளையாட்டை விளையாடுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முக்கியமான தேசிய பிரச்சினையில் மத்திய பாஜக அரசு மலிவான அரசியல் விளையாட்டை விளையாடுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "மே 16ஆம் தேதி காலையில் மோடி அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டிருந்தது. அன்று மாலையே நான்கு உறுப்பினர்களின் பெயர்களும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மூலமாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து 17-ம் தேதி பின்னிரவில் பிரதிநிதிகளின் குழுவில் இடம்பெறும் முழு உறுப்பினர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. மிகவும் துரதிருஷ்டவசமாக, காங்கிரஸ் பரிந்துரைத்த நான்கு பேரில் ஒருவர் மட்டுமே பிரதிநிதிகளின் குழுக்களில் இடம் பெற்றுள்ளார். இது மோடி அரசின் முழுமையான நேர்மையின்மையினை நிரூபிக்கிறது. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பிரச்சினைகளில் பாஜக ஆடும் மலிவான அரசியல் விளையாட்டைக் காட்டுகிறது. பிரதமர் மற்றும் பாஜகவின் பரிதாபகரமான இந்த விளையாட்டால் காங்கிரஸ் கட்சி குறுகிவிடாது.



காங்கிரஸ் கட்சி எப்போதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சிறந்த மரபுகளை நிலை நிறுத்தும். தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜகவைப் போல மலிவான அரசியலை ஒரு போதும் செய்யாது. அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் வாழ்த்துகள்." என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: அவரு பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்'லுங்க.. சசி தரூரை போட்டு பொளக்கும் தோழர்கள்.!!

இதையும் படிங்க: இறக்குமதிக்கு கட்டுப்பாடு.. வங்கதேசத்தின் பொருட்களுக்கு தடை..! பட்டியலிட்ட மத்திய அரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share