மும்பை தாக்குதல் 166 உயிர்களை பலிகொண்ட 26/11 வழக்கு! 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வேகம் பிடித்த விசாரணை!
மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து, 18 ஆண்டுகளான நிலையில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத் உட்பட ஆறு பேர் மீது, 'இன் ஆப்சென்டியா' எனப்படும், தலைமறைவாக உள்ள நபருக்கு எதிரான விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து 18 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வழக்கில் முக்கிய திருப்பமாக லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக, அவர்கள் இந்தியாவில் இல்லாத நிலையில் நடத்தப்படும் ‘இன் ஆப்சென்டியா’ விசாரணையை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008 நவம்பர் 26ல் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். மூன்று நாட்கள் நீடித்த இந்த கொடூர சம்பவத்தில் 166 பேர் உயிரிழந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு முக்கிய பங்கு இருந்ததாக இந்திய விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், ஜாகிர்-உர்-ரெஹ்மான் லக்வி, சஜித் மிர், அபு அல்-கமா, அபு கஹாபா மற்றும் அப்துல் ரெஹ்மான் பாஷா ஆகிய ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நபருக்கு 9 சிம் கார்டு மட்டுமே அனுமதி! மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு! அமலாகும் புதிய விதி!
இந்த ஆறு பேரும் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்திய நீதிமன்றத்தில் இதுவரை நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை முன்னெடுத்துச் செல்வதில் சட்டரீதியான சிக்கல்கள் நீடித்து வந்தன.
இந்த சூழலில், இந்தியாவில் இல்லாமல் தலைமறைவாக இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்படும் ‘இன் ஆப்சென்டியா’ நடைமுறையின் கீழ் மும்பை போலீசார் விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளனர். இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படாத நிலையிலும், வழக்கின் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் பட்சத்தில் சட்டப்படி தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஏப்ரல் 22ல் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை தாக்குதல் வழக்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய சட்ட நடவடிக்கை, தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணையை மீண்டும் தீவிரப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 688 கடிதங்கள்!! 23 மாத உரையாடல்! காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்!!