×
 

இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

ஒடிசாவில் நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட நக்சலைட்டுகள் 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து வன்முறையைக் கைவிட்டு, போலீசாரிடம் சரணடைந்தனர்.

புல்பானி (ஒடிசா): நாடு முழுவதும் நக்சல் பயங்கரவாதத்தை மார்ச் 31-க்குள் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ள நிலையில், ஒடிசாவில் பெரிய சரணடைப்பு நிகழ்வு நடந்துள்ளது. கந்தமால் மாவட்டம் புல்பானி போலீஸ் ஸ்டேஷனில் நக்சலைட்டுகள் 10 பேர் ஆயுதங்கள், வெடிமருந்துகள், துப்பாக்கிகளை ஒப்படைத்து வன்முறையைக் கைவிட்டு சரணடைந்தனர்.

இவர்களில் 7 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் அடங்குவர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இவர்களில் ஒருவர் நக்சல் அமைப்பின் உள்ளூர் தலைவர் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த 10 பேருக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1.15 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசின் சரணடைப்பு திட்டத்தின் கீழ் இவர்களுக்கு நிதி உதவி, மறுவாழ்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.

மத்திய அரசின் காலக்கெடு காரணமாக நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் பதுங்கியிருக்கும் காடுகளை கண்டறிந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 60 ஆண்டு போராட்டம் முடிந்தது?! அழிவின் விளிம்பில் நக்சல்!! அமித்ஷா நடவடிக்கைக்கு கைமேல் பலன்!!

அதேநேரம், ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி பாதையில் வருபவர்களுக்கு அரசு பெரும் ஊக்கத்தொகை அளித்து வருகிறது. இதனால் சரணடைப்புகள் அதிகரித்து வருகின்றன.

ஒடிசாவில் நபரங்காபூர், பலங்கிர், கோராபுட், மல்கன்கிரி, நுவாபாடா, பவுத் ஆகிய மாவட்டங்கள் ஏற்கனவே நக்சல் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது கந்தமால், கலஹண்டி, ராயகடா மாவட்ட எல்லைப் பகுதிகளை நக்சல் இல்லாததாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்று ஒடிசா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சரணடைப்பு நிகழ்வு நக்சல் ஒழிப்பில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. மார்ச் 31 காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், மேலும் பல நக்சலைட்டுகள் சரணடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நக்சல் பயங்கரவாதம் பலவீனமடைந்து வருகிறது. இது அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: க்ளைமேக்ஸை எட்டிய நக்சல் ஒழிப்பு நடவடிக்கை! சொன்னதை செய்து காட்டிய அமித்ஷா!! 22 பேர் சரண்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share