நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!
நீட் முதுகலை கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீட் முதுகலை தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்களை குறைத்ததற்கு எதிரான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது மருத்துவக் கல்வியின் தரம், மருத்துவர்களின் தகுதி, நோயாளிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.2025-26 ஆம் ஆண்டுக்கான NEET PG தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பல ஆயிரக்கணக்கான முதுகலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
இதனால், தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் ஜனவரி 13, 2026 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மூன்றாம் சுற்று கவுன்சலிங்கிற்கான தகுதி percentile-ஐ மிகக் கடுமையாகக் குறைத்தது. பொதுப்பிரிவினருக்கு 50-இலிருந்து 7-ஆகவும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40-இலிருந்து 0-ஆகவும் தகுதி அனுமதிக்கப்பட்டது.
இதனால், 800 மதிப்பெண்களில் -40 எடுத்தவர்கள்கூட கவுன்சலிங்கில் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்த முடிவு மருத்துவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. பல மருத்துவர்கள், மருத்துவ அமைப்புகள் இதை மருத்துவக் கல்வியின் தரத்தை குறைப்பதாகவும், எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!
இதன் விளைவாக, பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். மேலும், நீட் முதுகலை கட் ஆப் குறைப்பிற்கு எதிரான இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் SIR பணிகள் விறுவிறு..!! மேலும் 10 நாட்கள் அவகாசம்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!