×
 

EPS தலைமையில் என்ஜின் ஆட்சி... விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல்..! பியூஷ் கோயல் உறுதி..!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் டபுள் எஞ்சின் ஆட்சி அமையும் என பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்ட நிலையில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி வலுப்பெற்றுள்ள நிலையில், கட்சி 169  தொகுதிகளில் போட்டியிடவும், மீதமுள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்னும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக அவரே உறுதி செய்திருந்தார். ஆனால் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, ஐஜேகே என கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. ஆனால் பாஜக மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!

அப்போது ஊழல் திமுக அரசை வீழ்த்த எண்டிய கூட்டணி ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரட்டை எஞ்சின் அரசு அமையும் என்றும் கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்தார். 27 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் குறித்து இன்று விவாதிக்கப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு..! இன்றைய தினம் புதிய துவக்கம்... பியூஷ் கோயல் உற்சாகம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share