தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!! பள்ளிகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு!! யார் இந்த கிரிஜா அம்மா?!
தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் கிரிஜாவை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.
தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் கிரிஜா அம்மாவின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தனது 134-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பாராட்டியிருப்பது தமிழக கல்வித்துறையிலும் சமூக வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் வீரர்களின் நலனுக்காக மாணவர்களை ஊக்குவித்து நிதி திரட்டிய அவரது முயற்சி தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சமீபத்தில் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கிரிஜா அம்மாவை மீண்டும் சந்தித்ததாக நினைவுகூர்ந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பும் அவரை சந்தித்திருந்ததாக கூறிய மோடி, தற்போது அவர் கல்வி மற்றும் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை பாராட்டினார்.
கிரிஜா அம்மா சுமார் 15 பள்ளிகளை நிர்வகித்து வருவதாகவும், அவற்றில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி முக்கிய கல்வி நிறுவனமாக திகழ்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கல்வியை மட்டுமல்லாமல் மாணவர்களிடையே நாட்டுப்பற்று மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் பணியிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!! மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை!
மன் கி பாத் நிகழ்ச்சியால் ஊக்கமடைந்த கிரிஜா அம்மா, நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றும் வீரர்களின் நலனில் தானும் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு சிறப்பு முயற்சியை தொடங்கியதாக மோடி கூறினார். இதற்காக தனது பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தினமும் ஒரு ரூபாய் சேமித்து வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த முயற்சிக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் ஒத்துழைத்த நிலையில், ஒரு ஆண்டில் ஒவ்வொரு மாணவரும் 365 ரூபாய் வீதம் பங்களித்துள்ளனர். பல பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் பங்களிப்பால் மொத்தமாக சுமார் 40 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த தொகைக்கான காசோலையை கிரிஜா அம்மா நேரடியாக தன்னிடம் வழங்கியதாக கூறிய மோடி, அவருடன் உரையாடியபோது இந்தியா மீது அவர் கொண்டிருக்கும் அன்பும் அர்ப்பணிப்பும் தன்னை ஆழமாக கவர்ந்ததாக குறிப்பிட்டார்.
ஒரு ஆசிரியரின் ஊக்குவிப்பால் மாணவர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு நாட்டிற்காக பங்களித்திருப்பது அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் பாராட்டினார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்-யின் கோரிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல்!! டிக் அடித்தார் பிரதமர் மோடி! டெல்லியில் பரபரப்பு!