மாவோயிசத்தை ஒழித்ததில் CRPF பங்களிப்பு மகத்தானது! பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
சிஆர்பிஎஃப் நிறுவன தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய சேமக் காவல் படையின் (CRPF) நிறுவன தினத்தை முன்னிட்டு, நாட்டின் அனைத்து சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்பு மட்டுமின்றி, உள்நாட்டுப் அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் மத்திய சேமக் காவல் படை தன்னிகரற்றப் பங்காற்றி வருகிறது. சி.ஆர்.பி.எஃப் நிறுவன தினத்தை முன்னிட்டுத் தனது அதிகாரப்பூர்வச் சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் தனது வாழ்த்துப் பதிவில், மத்திய சேமக் காவல் படையின் நிறுவன நாளில் அனைத்து சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அசைக்க முடியாத வீரம் மற்றும் கடமையுணர்ச்சியின் மூலம் சி.ஆர்.பி.எஃப் படை தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பைப் பேணுவதில் இருந்து, கடினமான சவாலான காலங்களில் மக்களுக்குச் சேவை செய்வது வரை, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் எப்போதும் தேசத்திற்கே முதலிடம் அளித்துச் செயல்பட்டு வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2026-இல் தங்கம் வென்றார் மீராபாய் சானு! தொடர்ந்து 3-ஆவது முறையாக தங்கம் வென்று சாதனை!
மேலும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த மாவோயிசப் பேராபத்தை முறியடித்து ஒழிப்பதில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஆற்றிய நற்பணி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் அமைதியையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இவர்களது தியாகமும் முயற்சியும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "மாணவர் போராட்டம் பிரதமரை எழுப்பியுள்ளது; ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை!" சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்!