×
 

#BREAKING: தூக்குல போடுங்க..! புதுவை சிறுமி கொலை வழக்கு..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை உலுக்கிய மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்று 2024 மார்ச் 2ஆம் தேதி முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்றது. 9 வயது ஐந்தாம் வகுப்பு சிறுமி ஒருவர் வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, உடல் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கருணா என்பவரை போக்சோ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. சம்பவம் நடந்த அன்று, முத்தியால்பேட்டை சோலை நகர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள கோயிலருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருணாஸ் என்பவர், சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி அருகிலுள்ள மாட்டுக் கொட்டகை வீட்டின் மாடி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

அந்த இடத்தில் தங்கியிருந்த விவேகானந்தன் என்பவர் இதைப் பார்த்து, கருணாஸை மிரட்டி வெளியே அனுப்பிவிட்டு, தானும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி சுயநினைவை இழந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை கயிறால் கட்டி, துணியில் சுற்றி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவு நீர் வாய்க்காலில் வீசினர். சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனை ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

விசாரணையில் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் மீது சந்தேகம் எழுந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 560 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  விசாரணைக்கு பிறகு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் விவேகானந்தன் சிறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில்

குற்றவாளி கருணா என்ற காக்கா கருனாசுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி தீர்ப்பு வழங்கி உள்ளார். புதுச்சேரியில் வழக்கு ஒன்றில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஜுன் 1-ல் தொடக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share