×
 

கோடை காலத்தை முன்னிட்டு 18,000 சிறப்பு ரயில்கள்..! ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!

கோடை காலத்தை முன்னிட்டு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புரைகள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோடை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,262 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே துறை ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் சேவைகளை அதிகரித்து வருகிறது. 2026ஆம் ஆண்டுக்கான இந்த திட்டம், ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான மூன்று மாத காலத்தை உள்ளடக்கியது.

இந்த காலகட்டத்தில் பள்ளி விடுமுறை, குடும்ப பயணங்கள் மற்றும் சுற்றுலா சீசன் காரணமாக ரயில் பயணத்தின் தேவை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 908 சிறப்பு ரயில்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை ஒட்டுமொத்தமாக 18,262 பயணங்கள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில் 660 ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன, இவை 11,294 பயணங்களுக்கு பதிவு செய்யும் வசதியை பயணிகளுக்கு வழங்குகின்றன. மீதமுள்ள ரயில்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் நாட்டின் அனைத்து முக்கிய ரயில் மண்டலங்களிலும் இயக்கப்படும், இதனால் பெரிய நகரங்களுக்கு இடையேயான இணைப்பு மேம்படுத்தப்படும். 

இதையும் படிங்க: சென்னை எக்மோரில் அதிரடி! ₹16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல்!

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் சுமார் 12,417 சிறப்பு ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 18,262ஆக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு பயணிகளின் காத்திருப்பு பட்டியலை குறைக்கவும், கூடுதல் பெர்த்துக்களை வழங்கவும் உதவும் என ரயில்வே துறை நம்புகிறது. மேலும், இந்த சேவைகள் மூலம் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் சீரான பயண அனுபவத்தை உறுதி செய்ய முடியும்.

இதையும் படிங்க: இன்னும் கத்திரியே தொடங்கல.. அதுக்குள்ளயா..!! 11 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share