×
 

ஏழு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! உஷார் நிலை தீவிரம்..!

காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்றதன் காரணமாக ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்குவங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் வடமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 

இந்த நிலையில் 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோடையில் மிரட்டும் கனமழை... தென்பண்ணையில் வெள்ளப்பெருக்கு! மக்களே உஷார்!

இதனிடையே, இன்று பிற்பகல் ஒரு மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், தூத்துக்குடி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செம்ம மழை காத்திருக்கு..! இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருந்துக்கோங்க..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share