×
 

இந்தியா வருகிறது மற்றுமொரு சுதர்சன சக்கரம்! 4வது S 400 வான் பாதுகாப்பு!! இந்தியாவுக்கு கூடுதல் பலம்!!

இந்தியாவிற்கு வழங்க வேண்டிய 4வது எஸ் 400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இது மே மாத மத்தியில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக, ரஷ்யா தயாரித்த 4வது எஸ்-400 வான் பாதுகாப்பு கவச வாகனத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது வரும் மே மாதம் நடுப்பகுதியில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400, இந்தியாவில் ‘சுதர்சன சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு 600 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் இது திறம்பட செயல்படும். உலகின் மிக சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

2018-ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் 5 எண்ணிக்கையிலான எஸ்-400 அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய். இதுவரை ரஷ்யா 3 அமைப்புகளை மட்டுமே வழங்கியுள்ளது. இந்த மூன்றும் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையில் நிறுவப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இனி தண்டனையில் இருந்து தப்பவே முடியாது!! மறைமுகமாக பாகிஸ்தானை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் போது, எஸ்-400 அமைப்பு சிறப்பாக செயல்பட்டது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தது. இதன் செயல்திறனை உணர்ந்த இந்தியா, மீதமுள்ள இரண்டு அமைப்புகளையும் விரைவில் வழங்குமாறு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்தது.

இந்நிலையில், 4வது எஸ்-400 அமைப்பு கடந்த 18-ம் தேதி கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது. 5வது மற்றும் இறுதி எஸ்-400 அமைப்பு நவம்பர் மாதத்திற்குள் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய விமானப்படையின் பாதுகாப்பு வலுப்பெறும். எஸ்-400 அமைப்பு இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளுக்கு மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது. 

இதையும் படிங்க: பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்து வளர்க்கும் காங்.,!! அமித் ஷா பகிரங்க குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share