×
 

திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் வாயு கசிவால் மூச்சு திணறல் ஏற்பட்டது.

சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் திடீரென வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மக்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். இருமல், குமட்டல், மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்திற்கு அருகே தலைமைச் செயலகம் இருக்கும் நிலையில் வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. துறைமுகத்தில் ஏற்பட்ட வாயு கசிவால் சென்னை தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

துறைமுகத்தில் சல்ஃபர் வாயுகசிவு ஏற்பட்டதால் காற்றின் தரம் மோசமடைந்ததாகவும், காற்றில் வாயு கலந்ததால் சுவாச பாதிப்பு ஏற்படலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வெப்பம் காரணமாக சல்பேட் வாயுகசிவு ஏற்பட்டதாக துறைமுகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சல்பேட் வேதியியல் மாற்றமடைந்து வெண்புகையாக படர்ந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறுகின்றனர். திடீரென ஏற்பட்ட இந்த வாயுகசிவால் பொதுமக்கள் பெரும் மச்சம் அடைந்துள்ளனர். காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் அமோனியா வாயுவால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. PM 2.5, PM 10 நுண் துகள்கள் மற்றும் NO2, NH3 வாயு கலவைகள் காற்றில் கலந்து உள்ளன. காற்றின் தரம் மோசம் அடைந்திருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படிங்க: இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் வந்தாச்சு பயோமெட்ரிக் வருகைப் பதிவு..!!

குழந்தைகளை அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் மும்முரம் காட்டினர். தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர். இருப்பினும் காற்றில் கலந்த வாயுவால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் காற்றின் தர குறியீடு 68 என்ற முறையில் திருப்திகரமாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share