×
 

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... உடல் சிதறி இறந்த உயிர்... 2 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து - தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்த நிலையில் இரு பெண் தொழிலாளர்கள் காயம்

சிவகாசியில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெடிபொருட்களை கையாளுதல், முறையற்ற ரசாயன கலவை, மற்றும் அனுபவமற்ற தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுதலால் அடிக்கடி பயங்கர விபத்துக்கள் நேரிடுகின்றன. இதைத் தடுக்க, அனைத்து பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கும் கட்டாய செயல்முறை பயிற்சி அளிக்க வேண்டும், உரிமம் பெறாத ஆலைகள் மற்றும் சட்டவிரோத உற்பத்தி கூடங்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன கிடங்குகளில் அடிக்கடி திடீர் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்., பட்டாசு ஆலைகளில் தீயணைப்பு சாதனங்களை முறையாகப் பராமரித்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் பயங்கர வெடி விபத்துக்களில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இப்பகுதியில் 2014 முதல் ஏப்ரல் 2025 வரை 236 விபத்துகளில் 291 பேர் உயிரிழந்துள்ளனர், இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவகாசியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகாசி அருகே விஸ்வநத்தம் காமராஜர் நகரில் சங்கர் என்பவருக்கு சொந்தமான நடேஷ் பட்டாசு தொழிற் சாலையின்  20- அறைகளில் சுமார் 60- ஆண், பெண்  தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளை  செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பட்டாசு மூலப் பொருள் அறையில் உராய்வு காரணமாக  திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் மூன்று அறைகள் தரைமட்டமானது. அத்துடன் மற்ற இரண்டு அறைகளும் சேதமடைந்தன. 

இதையும் படிங்க: அதிகாலையிலேயே அதிர்ச்சி...!! - பற்றி எரிந்த மருத்துவமனை ஐ.சி.யூ... 10 பேர் உடல் கருகி உயிரிழப்பு; 11 பேர் படுகாயம்...!

சம்பவமறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில்  குருநாதன் என்ற தொழிலாளி  உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் பானுப்பிரியா, பூமாரி ஆகிய இரண்டு பெண் தொழிலாளிகள் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள  சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் விபத்துசம்பவம் நடந்த பட்டாசு தொழிற்சாலையை  மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீநாதா, சார் ஆட்சியர் முகமது இர்பான் ஆகியோர்   நேரில் ஆய்வு செய்து விபத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர் .

இதையும் படிங்க: #BREAKING இப்படிக்கூட சாவு வருமா?... எமனாக மாறிய கொசுவர்த்தி... தூங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை உட்பட மூவர் பலி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share