×
 

நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்! ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா பதிலடி!

நீட் விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று ராகுல் காந்தியைச் சாடியுள்ள மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார் எனக் கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யக் கூடாது என்றும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஜெ.பி. நட்டா மாநிலங்களின் வினாத்தாள் கசிவு: ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முந்தைய காலங்களில் பல தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியான போது ராகுல் காந்தி ஏன் கேள்வி எழுப்பவில்லை?

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களிலும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் மௌனம் காத்த ராகுல் காந்தி, குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் மட்டும் அரசியல் லாபத்திற்காகக் கேள்வி எழுப்புவது ஏன்?

இதையும் படிங்க: பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

நீட் விவகாரம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஆழ்ந்த, தீவிரமான விவாதம் நடத்த மத்திய அரசு முழுமையாகத் தயாராக இருக்கிறது.

ஆளும் கட்சியாகிய நாங்கள் விவாதிக்கத் தயாராக இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காமல் ஓடி ஒளிவதைப் பார்க்கும்போது அவர்கள் விவாதத்திற்குத் தயாராக இல்லை என்பதையே புரிந்துகொள்ள முடிகிறது.

முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் சூழலில், மாணவர்கள் நலனில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share