×
 

சாட்டையை சுழற்றிய விஜய்... திமுக Ex.அமைச்சர் சிவசங்கர் தலையில் இறங்கியது பேரிடி... வெளியானது முக்கிய தகவல்....!

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு தொடர்பு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவரை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இளஞ்சழியன் என்பவரை கடந்த 24ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறை சார்பு ஆய்வாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், அவர் தலைமைச் செயலகத்தில் அமைச்சரை நேரில் சந்தித்ததாகவும், "நீங்கள் கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது; அரசு வேலை வாங்கித் தருகிறேன்" என்று அமைச்சர் நம்பிக்கை அளித்ததாகவும் கூறி தம்மை ஏமாற்றியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பலமுறை முன்னாள் அமைச்சர் சிவசங்கருடன் செல்போனில் பேசியதன் மூலம் தனக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முன்னாள் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோருக்கு தாம் நெருக்கமானவர் என்றும், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தமது தாயின் ஆசிரியர் என்றும் கூறி இளஞ்சழியன் மோசடியில் ஈடுபட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டன் ஆன சென்னை... காலையிலேயே கொத்து, கொத்தாய் கைது... மதுரை, நெல்லை, கோவை, சேலத்திலும் தொடரும் அதிர்ச்சி...!

பலரிடமும் பணம் பெற்று அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகவும் புகாரில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இளஞ்சழியன் தனது உதவியாளர் அல்ல என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சிவசங்கரின் பெயர் நேரடியாக இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புகார்தாரரின் வாக்குமூலத்தில் அவரது பெயர் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இளஞ்சழியனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் நடைபெறும் விசாரணையின் மூலமாக, அவர் எத்தனை ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் சிவசங்கருடன் தொடர்பில் இருந்தார், எந்த வகையில் செயல்பட்டார், மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது உள்ளிட்ட பல்வேறு உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சிவசங்கரை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share