×
 

டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னிட்டு செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; ஈடுசெய்ய நவம்பர் 28 வேலை நாளாகும்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள சர்வதேச 'பிரிக்ஸ்' (BRICS) உச்சி மாநாட்டு முன்னேற்பாடுகள் மற்றும் அதையொட்டிய உச்சக்கட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தவுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த மெகா மாநாட்டிற்காகத் தலைநகர் டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து மாற்றங்களும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

குறிப்பாக, மாநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்பு மற்றும் விவிஐபி (VVIP) வாகனப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்ச நீதிமன்ற வளாகத்தின் செயல்பாடுகளிலும் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

இது தொடர்பாக உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், "டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் நீதிமன்ற அமர்வுகளோ அல்லது வழக்குகளின் விசாரணைகளோ நடைபெறாது. மேலும், செப்டம்பர் 11 அன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் நவம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் முழுமையான பணி நாளாக வழக்கம்போல் செயல்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share