ரஃபேலுடன் டீல் போட்ட டாடா... விமானத்தின் பாகங்களை உள்நாட்டில் தயாரிக்க திட்டம்!!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் டாடா குழுமம் முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.
இந்தியா ராணுவம் பாகிஸ்தானுடனான போருக்கு பிறகு தங்களளை மேலும் பலபடுத்திக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பகா பாதுகாப்புப் படையை நவீனமயமாக்கும் நடவடிக்கை மிக தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி அதிநவீன போர் விமானங்கள், விமான தாங்கி கப்பல்கள், துப்பாக்கிகள் என்று நவீன ஆயுதங்கள் வாங்கப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படையில் தற்போது இருக்கும் முக்கியமான அதிநவீன ஜெட் விமானமான ரபேல் போர் விமானங்களுக்கான முக்கிய உபகரணங்களைத் தயாரிக்க இந்தியாவின் டாடா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் மிக பெரிய குழுமமாக விளங்கும் டாடா, அனைத்து வகையான துறையிலும் தங்களது தடத்தை பதித்துள்ளது.
ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு நோயல் டாடா டாடா அறக்கட்டளைக்குத் தலைமை தாங்கி வருகிறார். டாடா குழுமம் இப்போது பல புதிய துறைகளில் நுழைந்து வருகிறது. குறிப்பாக உற்பத்தித் துறையில் கவனம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே டாடா குழுமத்தில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரஃபேல் போர் விமானங்களுக்குத் தேவையான நான்கு முக்கியமான உதிரிப் பாகங்களை டாடா தயாரிக்கும். இந்த உதிரிப் பாகங்கள் இந்தியா மட்டுமின்றி சர்வதச அளவில் விற்பனை செய்யப்படும் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்படும்.
இதையும் படிங்க: பென்ஷன் வாங்குவோருக்கு ஹாப்பி நியூஸ்... பென்ஷன் பணம் இனி தாமதமாகாது!!
இது மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நாட்டின் ஜெட் விமான உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், சர்வதேச விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான படியாக இருக்கும். இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் அதிநவீன உற்பத்தி ஆலையை அமைக்கும். இந்த ஆலையின் தன் ரஃபேல் விமானத்தின் பின்புற பக்கவாட்டுப் பகுதிகள், பின்புறப் பகுதி, மத்திய பகுதி மற்றும் முன் பகுதி போன்ற முக்கியமான பாகங்கள் தயாரிக்கப்படும். கடந்த மாதம் தான் இந்தியக் கடற்படைக்காக 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை வாங்க இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இப்போது ஒரே மாதத்தில் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் டாடா வசம் வந்துள்ளது. இந்தியா 22 ஒற்றை இருக்கை ரபேல் விமானங்களையும் மற்றும் நான்கு இரட்டை இருக்கை ரபேல் விமானங்களையும் கடற்படைக்காக வாங்கவுள்ளது. இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், விமானப் பயிற்சிக்குத் தேவையான கருவிகள், உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் என அனைத்தும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்கும். விமானப்படை வசம் ஏற்கனவே தற்போது இருக்கும் ரஃபேல் விமானங்களுக்கான கூடுதல் உபகரணங்களும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்... ஆக்சிஜன், படுக்கைகள் தயாரா வச்சுக்கோங்க... மத்திய அரசு வார்னிங்!!