×
 

கண்ண மூடிட்டு ஆதரிக்க முடியுமா? அரசியல் ரீதியா அணுகனும்! சிபிஆர் குறித்து TKS இளங்கோவன் பேட்டி..!

சி பி ராதாகிருஷ்ணன் விவகாரத்தை அரசியல் ரீதியாக தான் அணுக வேண்டும் என டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டதற்கு வைகோ உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் டி கே எஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, சிபி ராதாகிருஷ்ணன் ஒரு ஆர்எஸ்எஸ் காரர் என்றும் அவர் பாஜக வேட்பாளர் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: 21ம் நூற்றாண்டிலும் சாதி மோதல்!.. எல்லாரும் வெட்கப்படனும்... டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்..!

இதனை மொழி ரீதியாக நாம் பார்க்க கூடாது என்றும் அரசியல் ரீதியாக பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ராஜினாமா செய்த முன்னாள் துணை குடியரசு தலைவரை தற்போது தேடுகிறார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை., அந்த நிலைமை சிபி ராதாகிருஷ்ணனுக்கு வரக்கூடாது என்று கூறினார். பாஜக தமிழர்களுக்கு வேலை செய்யவில்லை என்றும் அது தமிழர்களை அவமதிக்கும் செயல் என்றும் தமிழர்களுக்கு அவர்கள் எதிரானவர்கள் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாரு.. பிரதமரின் உரை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share