அம்மாடியோவ்!! ரூ.11.91 லட்சம் கோடி!! திருப்பி கொடுங்க ட்ரம்ப்! இந்தியாவுக்கு பெரிய நிவாரணம்!! அமெரிக்க கோர்ட் உத்தரவு!!
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகத்திற்கு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் (U.S. Court of International Trade) டிரம்ப் அரசுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரிகளை வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க அரசு நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்தியா உட்பட பல நாடுகளின் இறக்குமதியாளர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும்.
கடந்த ஆண்டு டிரம்ப் அரசு 'பரஸ்பர வரி விதிப்பு' (reciprocal tariffs) என்ற பெயரில் உலக நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரிகளை விதித்தது. இது International Emergency Economic Powers Act (IEEPA) சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டது.
இந்த வரி விதிப்புக்கு உலக நாடுகள் மட்டுமின்றி அமெரிக்க உள்நாட்டு தொழிலதிபர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 20 அன்று அமெரிக்க உச்சநீதிமன்றம் 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், டிரம்புக்கு இத்தகைய வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என்று அறிவித்தது. இந்த வரிகள் சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: தேர்தல் வந்தால் பெட்டியைத் தூக்கிட்டு கட்சி, கட்சியா போய்டுவாங்க... டேரக்ட்டா பிரேமலதாவை சீண்டிய விந்தியா...!
இந்நிலையில், வர்த்தக நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் கே. ஈட்டன், Atmus Filtration வழக்கில் மார்ச் 4 அன்று முக்கிய உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 'லிக்விடேஷன்' (liquidation) என்ற நடைமுறை உள்ளது.
அதாவது, பொருட்கள் வரும்போது மதிப்பிடப்பட்ட வரி செலுத்தப்பட்டு, சுமார் 314 நாட்களுக்குப் பிறகு இறுதி செய்யப்படும். ஆனால் இப்போது, IEEPA வரிகளை கணக்கில் கொள்ளாமல் பொருட்களின் விலையை இறுதி செய்து, கூடுதல் தொகையை வட்டியுடன் திருப்பி அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது அனைத்து பாதிக்கப்பட்ட இறக்குமதியாளர்களுக்கும் (இந்தியா உட்பட) பொருந்தும்.
இந்த வரிகள் விதிக்கப்பட்ட பிறகு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் கோடிக்கணக்கான டாலர்கள் செலுத்தியுள்ளனர். மொத்தம் $100 பில்லியன் முதல் $175 பில்லியன் (சுமார் 11.91 லட்சம் கோடி ரூபாய்) வரை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவு. அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது, ஆனால் நீதிமன்றம் அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் (வழக்கு தொடராதவர்களுக்கும்) பலன் கிடைக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு உலக வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய ஏற்றுமதியாளர்கள், அமெரிக்காவுக்கு அனுப்பிய பொருட்களுக்கு செலுத்திய கூடுதல் வரிகளை திரும்ப பெற வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதி துறைக்கு நிவாரணமாக அமையும்.
இதையும் படிங்க: ஈரான் மீது பொருளாதார தடை?! அமெரிக்க அடுத்த திட்டம்! ஆதரவாக களமிறங்கிய சீனா, ரஷ்யா!