×
 

கண் முன் அரங்கேறிய கோரம்... ஹை அலர்ட்டில் உ.பி., பீகார்... அமித் ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

ஆறுகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், அம்மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஆறுகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குள் பாயும் முக்கிய நதிகளாக கண்டக் மற்றும் கோசி ஆகியவை உள்ளன. இமயமலை மற்றும் திபெத் பகுதிகளில் உருவாகும் இந்த ஆறுகள், நேபாளம் வழியாக இந்திய சமவெளிப் பகுதிகளுக்குள் பாய்கின்றன. நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்த இரண்டு ஆறுகளிலும் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நேபாள எல்லையில் உள்ள பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரான், கிழக்கு சம்பரான், கோபால்கஞ்ச், முசாபர்பூர், வைசாலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பீகார் மாநில முதலமைச்சருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகாரில் தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தடம் தெரியாமல் உருகுலைந்து போன நேபாளம்... காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் இவ்வளவா?

இந்நிலையில், நேபாளத்திலிருந்து பீகாருக்கு வெள்ளநீர் வரக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதலமைச்சர் சாம்ராட் சௌதரி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு விழிப்புடன் செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணைக்கட்டுகள் மற்றும் கரைப்பகுதிகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக இரவு நேரக் கண்காணிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கிகள் அல்லது மைக்ரோபோன்கள் மூலம் தேவையான எச்சரிக்கைகளைத் தொடர்ந்து வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என பீகார் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள செய்தியில், கண்டக் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அதன் தாக்கத்தால் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால், மாவட்ட நிர்வாகங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் இருக்கவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பல கிராமங்களை விழுங்கிய பெரு வெள்ளம்... கொத்து கொத்தாய் பறிபோன உயிர்கள்... ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை இவ்வளவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share