அரசு பள்ளிகளில் பகவத் கீதை கட்டாயம்! தினமும் ஒரு ஸ்லோகம் படிக்கணும்! உத்தராகண்ட் அரசு அறிவிப்பு!
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதையின் வாசகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பகவத் கீதையின் ஸ்லோகங்களை தினசரி வாசிப்பதை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாணவர்களிடையே இந்திய கலாசாரத்தை ஊக்குவிக்கவும், சுய ஒழுக்கம், தலைமைப் பண்புகளை வளர்க்கவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் அரசு மாநிலப் பள்ளிகளில் கீதையின் ஸ்லோகங்களை வாசிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது மாணவர்கள் இந்திய கலாசாரத்தை அறிய உதவும். அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் நோக்கம்” என்று கூறினார்.
புதிய உத்தரவின்படி, பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தினமும் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். அதன் பொருளையும், அறிவியல் ரீதியான தொடர்பையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.3,112 கோடி கலெக்சன்!! தேர்தல் அறக்கட்டளை மூலம் கல்லா கட்டிய பாஜக!! காங்கிரஸுக்கு ரூ.300 கோடிதான்!
உத்தராகண்ட் கல்வி அமைச்சர் தன் சிங் ராவத் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள 17 ஆயிரம் அரசுப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணத்தை சேர்க்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அது செயல்படுத்தப்படும் வரை, பள்ளிகளில் தினசரி பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதை வாசிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்திய கலாசாரம் மற்றும் மதிப்புகளை மாணவர்களிடம் ஊட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த உத்தரவு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பொருந்தும். இது மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த முடிவு அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஆட்டத்தை தொடங்கிய பாஜக... EPS உடன் பியூஷ் கோயல் நாளை அதிமுக்கிய ஆலோசனை...!