#BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல்… இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டி
துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கட்சிப் பாகுபாடு இன்றி சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தாங்க! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த அறிவிப்பை வெளியிட்டார். மயில்சாமி அண்ணாதுரை காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி மற்றும் திருச்சி சிவாவின் பெயர்கள் இதற்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாழ்த்துங்க தலைவரே! பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்..!
வரும் 21ஆம் தேதி சுதர்ஷன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். ஹைதராபாத்தில் 1946-ல் பிறந்த சுதர்ஷன் ரெட்டி ஆந்திரா ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி 2007 உச்சநீதிமன்ற நீதிபதியானவர் சுதர்சன் ரெட்டி. 2005 இல் கௌஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுதர்சன் 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நான்காண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சுதர்ஷன் ரெடி கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.