அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!!
குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.
முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கடந்த 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தார். லண்டனுக்கு சென்று தனது மகள் ராதிகாவை சந்திக்கச் சென்றிருந்த அவர், புறப்படுவதற்கு சில நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கருகி இருப்பதால் டி என் ஏ பரிசோதனை நடத்தி உடல்களை அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் விஜய் ரூபா அணியின் டி என் ஏ ஒத்து போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் படேல் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு வருகை தர உள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ரூபானி ஒரு MAGIC… அவர் இல்லன்னு நெனச்சுக்கூட பார்க்க முடியல! அமித்ஷா உருக்கம்!
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் விரைவில் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அவரது உடல் விமானம் மூலம் ராஜ்கோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு சென்று சேரும் என்றும் இறுதிச் சடங்குகள் மாலை 5 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் 87 பேரின் உடல்கள் டி என் ஏ உடன் ஒத்துப் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 241 நபர்களில் 47 உடல்கள் உறவினர்களிடம் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் ரூபானி இல்லை என்பதை இதயம் ஏற்க மறுக்கிறது... பிரதமர் மோடி நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்!