தன்கர் ஏன் திடீர்னு ராஜினாமா பண்ணாரு? மறைக்காம சொல்லுங்க.. மத்திய அரசை கேள்வி கேட்கும் கார்கே!
''துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.
இதற்கு உடல் நலக் காரணங்களை அவர் குறிப்பிட்டிருந்தாலும், இந்த முடிவுக்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்குனு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியிருக்கார். "தன்கரோட ராஜினாமாவுக்கு அரசு தெளிவான பதில் சொல்லணும்"னு அவர் வலியுறுத்தியிருக்கார்.
ஜகதீப் தன்கர், 2022 ஆகஸ்ட் 11-ல் இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர். மாநிலங்களவை தலைவராகவும் பணியாற்றி வந்தவர், நேற்று முன் தினம் (ஜூலை 21, 2025) இரவு 9:30 மணிக்கு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பினார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? பிரதமர் மோடிக்கு செக் வைக்கும் ராகுல்காந்தி!!
உடல் நலக் காரணங்களாலும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கார். ஆனா, இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை சந்தேகத்தோடு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
மல்லிகார்ஜூன கார்கே, X-ல ஒரு பதிவு மூலமா, "தன்கர் மாநிலங்களவையை சுறுசுறுப்பா நடத்தினவர். அவரோட திடீர் ராஜினாமாவுக்கு உடல் நலம் மட்டும் காரணமா இல்லை, வேறு அரசியல் அழுத்தங்கள் இருக்கா? ஒன்றிய அரசு இதுக்கு தெளிவான விளக்கம் கொடுக்கணும்"னு கேட்டிருக்கார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும், "திங்கட்கிழமை பகல் 1 மணி முதல் மாலை 4 மணிக்குள்ள ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு. உடல் நல காரணத்தை விட ஆழமான காரணங்கள் இருக்கு"னு பதிவு செய்திருக்கார்.
இந்த ராஜினாமாவுக்கு மத்திய அரசுடனான கருத்து வேறுபாடு காரணமா இருக்கலாம்னு டெல்லி வட்டாரங்களில் பேச்சு அடிபடுது. குறிப்பா, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது லஞ்ச வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொடுத்த தகுதி நீக்க நோட்டீஸை தன்கர் ஏற்றுக்கொண்டது, மத்திய அரசுக்கு பிடிக்கலையாம்.
இதனால, பாஜக மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே தன்கர் ராஜினாமா செய்திருக்கலாம்னு கூறப்படுது. இதோடு, தமிழக அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்ததை தன்கர் கடுமையாக விமர்சிச்சிருந்தது, அவரோட முடிவுக்கு முக்கிய காரணமா பார்க்கப்படுது.
காங்கிரஸ் தவிர, உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், "தன்கர் விவசாயிகள் நலனுக்காகவும், நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். அவரோட ராஜினாமா பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருக்கலாம்னு" சந்தேகம் எழுப்பியிருக்கார்.
ஆனா, மத்திய அரசு இதுவரை இந்த கேள்விகளுக்கு எந்த பதிலும் கொடுக்கல. உள்துறை அமைச்சகம், தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக மட்டும் அறிவிச்சிருக்கு.
இந்த சூழல்ல, அடுத்த 60 நாட்களுக்குள் புதிய துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படணும்னு அரசியலமைப்பு சொல்லுது. இப்போதைக்கு, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இந்த பொறுப்பை கவனிப்பார். தன்கரின் ராஜினாமா பின்னணி குறித்து அரசு தரப்பிலிருந்து தெளிவான பதில் வருமானு எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் ஆவலோடு பார்க்குறாங்க.
இதையும் படிங்க: வெளியுறவுத்துறை அமைச்சருக்கே ஆப்பா? கட்சி தாவும் சசிதரூர்? புகைச்சலில் பாஜ- காங்கிரஸ்..!