×
 

வினாத்தாள் கசியும் போதெல்லாம் விசாரணை குழுவா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் கல்வி அமைச்சரை ஏன் பதவி நீக்கம் செய்வதில்லை? என பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்கள் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மத்திய அரசை நோக்கி காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் திரு. ராகுல் காந்தி எம்.பி அவர்கள் மிகக் கடுமையான கணைகளைத் தொடுத்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தைக் கலைக்கக் கோரி ராகுல் காந்தி விடுத்துள்ள காரசாரமான அறிக்கையில் ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு வினாத்தாள் கசியும் போதெல்லாம், அதற்கு ஒரு விசாரணைக் குழுவை அமைப்பதையே மத்திய அரசு தனது வழக்கமான வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஆனால், இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கு என்ன தீர்வு கிடைத்தது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வினாத்தாள் கசிவு போன்ற தொடர் குளறுபடிகளால், இரவும் பகலும் கஷ்டப்பட்டுப் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் உழைப்பும், அவர்களின் மருத்துவக் கனவும் அடியோடு சிதைக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். தேர்வுகளைத் தங்கு தடையின்றி, நேர்மையாக நடத்தத் தவறிய மத்தியக் கல்வித் துறை அமைச்சகத்தின் மீது ராகுல் காந்தி நேரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

தேசிய அளவிலான மிக முக்கியத் தேர்வுகளில் மீண்டும் மீண்டும் இத்தகைய வரலாற்றுப் பிழைகளும் தவறிழைப்புகளும் நடந்து வருகின்றன. இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வி அமைச்சரை ஏன் பிரதமர் மோடி இதுவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யவில்லை? என்று அவர் ஆவேசமாக வினவியுள்ளார். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்காமல், கல்வி அமைச்சகத்தின் தோல்விகளை விசாரணைக் குழுக்களின் பின்னால் ஒளிந்து கொண்டு மறைக்க மத்திய அரசு முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமர் மோடியை நோக்கி ராகுல் காந்தி முன்வைத்துள்ள இந்த அதிரடிக் கேள்விகள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க: தங்கம் வாங்காதீங்க.. பிரதமர் மோடியின் மக்கள் தியாக வேண்டுகோள்..!! ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share