×
 

நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

தொகுதி மறுவரையறைக்காக மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி.

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மகளிர் இடஒதுக்கீடு (131-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்) மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான சிறப்புப் பெரும்பான்மை கிடைக்காததால் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.

மக்களவையில் இன்று மாலை நடைபெற்ற 'டிவிஷன்' (Division) முறை வாக்கெடுப்பில் மசோதாக்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பதிவான 489 வாக்குகளில் 278 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 211 பேர் எதிராகவும் வாக்கு. மசோதா வெற்றி பெற 3ல் 2 பங்கு 326 வாக்குகள் தேவை.அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற அவையில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு, அதாவது 326 வாக்குகள் தேவை. ஆனால், அரசுத் தரப்பிற்கு 48 வாக்குகள் குறைவாகக் கிடைத்ததால் மசோதா தோல்வியைத் தழுவியது.

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தென்னிந்திய மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் எனத் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த வாதத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கருப்புக்கொடி போராட்டத்தின் எதிரொலியாக, ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில் மாநிலங்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் தொகுதி மறுவரையறையை இணைத்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் முழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் குரலை நசுக்க சதி! தொகுதி மறுவரையறை குறித்துத் திருமாவளவன், சு.வெங்கடேசன் ஆவேசம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது எனத் தனிப்பட்ட முறையில் உத்திரவாதம் அளித்தும், அதனை மசோதாவில் சட்டப்பூர்வமாக இணைக்காதது ஆளுங்கட்சிக்கு எதிராகத் திரும்பியது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்த மசோதா தோல்வி அடைந்ததன் மூலம், தற்போதைக்குத் தொகுதி மறுவரையறை பணிகள் நிறுத்தி வைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. 2026-க்குப் பிறகு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் மத்திய அரசுக்கு இருந்த சட்டச் சிக்கல்கள் தற்போது மேலும் அதிகரித்துள்ளன.

நாடாளுமன்ற வளாகத்தில் மசோதா தோல்வி அடைந்த செய்தி வெளியானதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெற்றி முழக்கங்களை எழுப்பி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை: 2029 தேர்தலுக்கான மெகா சூழ்ச்சி! கபில் சிபல் பகீர் குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share