ரன் வே-க்கு கீழே சுரங்கப்பாதை!! உலகத்திலேயே முதல்முறை!! அசத்தும் ஹைதராபாத் பேகம்பட் ஏர்ப்போர்ட்!
“ஹைதராபாத்தின் பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் அடியில், உலகின் முதல் நிலத்தடி போக்குவரத்து சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது,” என, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் புரட்சிகர திட்டத்தை அறிவித்துள்ளார். சட்டசபை கேள்வி நேரத்தில் நேற்று பேசிய அவர், “உலகில் எங்கும் இல்லாத வகையில், பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் அடியில் நிலத்தடி போக்குவரத்து சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன” என்றார்.
டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் காற்று மாசு, வடிகால் பிரச்னை மற்றும் போக்குவரத்து நெரிசலால் தவிப்பதாக சுட்டிக்காட்டிய முதல்வர், “ஹைதராபாத் இப்போது சிறப்பாக உள்ளது. ஆனால், உரிய திட்டங்கள் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நகரமும் அதே பிரச்னைகளை சந்திக்கும்” என்று எச்சரித்தார்.
இதைத் தடுக்கும் வகையில், 1937-ல் தொடங்கப்பட்ட பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்துக்கு அடியில் வாகனங்கள் செல்லும் நிலத்தடி சுரங்கப் பாதை கட்டப்படுகிறது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் மத்திய அரசின் அனுமதியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலகில் விமான ஓடுதளத்துக்கு அடியில் போக்குவரத்து சுரங்கம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!
இந்த சுரங்கப் பாதை மூலம், ஹைதராபாத் நகரின் வடக்குப் பகுதியில் இருந்து வரும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராணுவ பயன்பாட்டில் உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் பயணியர் விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்த திட்டம் நிறைவடைந்தால், ஹைதராபாத் உலக அளவில் தனித்துவமான நகரமாக மாறும் என்று ரேவந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.
தெலுங்கானா அரசு இந்த திட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து வருவதாகவும், பணிகள் வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார். ஹைதராபாத் நகரை உலகத் தரத்துக்கு உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்த அதிரடி திட்டம் தெலுங்கானா மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதல் விமான ஓடுதளத்துக்கு அடியில் சுரங்கப் பாதை என்ற சாதனை தெலுங்கானாவுக்கு பெருமை சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பணிகள் விரைவில் முடிவடைந்து, மக்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: களேபரமான புதுவை..! நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம்... வைத்திலிங்கத்தின் அலுவலகத்தை சூறையாடி ஆவேசம்..!!