×
 

உ.பி மாநிலத்திற்கு முதலிடுகளை அள்ளிக்குவித்த யோகி! ரூ1.5 லட்சம் கோடிக்கு டீல்! சிங்கப்பூர், ஜப்பான் பயணம்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் வெளிநாடு முதலீடுகளை கொண்டுவருவதற்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 4 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தை உலக அளவில் முதலீட்டு தலமாக மாற்றும் நோக்கில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 4 நாள் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தொழில் அதிபர்களை சந்தித்து மாநிலத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை விளக்கினார். இதன் விளைவாக ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தானதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

பயணத்தின் முதல் கட்டமாக பிப்ரவரி 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சிங்கப்பூர் சென்ற யோகி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வாங் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்தார். 

உத்தரபிரதேசத்தில் தரவு மையங்கள், லாஜிஸ்டிக்ஸ், குழு வீடுகள், ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் போன்ற துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புகளை விளக்கினார். இதன் முடிவில் ரூ.60,000 கோடி மதிப்பிலான MoUs கையெழுத்தானதுடன், ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டு முன்மொழிவுகளும் கிடைத்தன.

இதையும் படிங்க: பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் ஜப்பான் சென்ற யோகி, டோக்கியோ மற்றும் யமனாஷி நகரங்களில் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் பங்கேற்றார். ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமித்சு மோடேகி உள்ளிட்டோரை சந்தித்து, செமிகண்டக்டர்கள், கிரீன் எனர்ஜி, ஆட்டோமொபைல், ரோபாட்டிக்ஸ், ஹைட்ரஜன் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலியுறுத்தினார். 

யமனாஷி மாகாணத்துடன் 'ஜப்பான் சிட்டி' அமைப்பது, UP-யில் ஜப்பான் மாணவர்களுக்கு பயிற்சி, சுசுகி நிறுவனத்துடன் மாருதி உற்பத்தியை இரட்டிப்பாக்குதல் போன்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன் விளைவாக ரூ.90,000 கோடி MoUs கையெழுத்தானதுடன், ரூ.1.5 லட்சம் கோடி முதலீட்டு முன்மொழிவுகளும் பெறப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 4 நாள் பயணத்தில் ரூ.1.5 லட்சம் கோடி MoUs மற்றும் ரூ.2.5 லட்சம் கோடி முதலீட்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளன. இவை நிறைவேறினால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தை முடித்து லக்னோ திரும்பிய யோகி, "இது உத்தரபிரதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கில் முக்கிய மைல்கல். 2029-30-க்குள் இலக்கை அடையும் பாதையில் இப்பயணம் பெரும் திசை திருப்பியுள்ளது" என்று தெரிவித்தார்.

மாநிலத்தில் 'ஜப்பான் சிட்டி' (500 ஏக்கர்), 'சிங்கப்பூர் சிட்டி' போன்ற சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இது உத்தரபிரதேசத்தின் தொழில்மயமாக்கல் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: கட்சி தாவியதும் மாறிய ஓபிஎஸ்.. சட்டை பாக்கெட், காரில் நடந்த மாற்றம்..!! ஒரே நாளில் இப்படி ஒரு சேன்ஜ்-ஆ..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share