×
 

திமுக - காங்கிரஸ் கூட்டணி? நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்?! அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் வேணுகோபால்!!

கேரள முன்னாள் முதல்வர் மகன் ஒருவரின் சென்னை வீட்டில் தங்கியுள்ளார்; நள்ளிரவில் அவரை, அந்த வீட்டில் தி.மு.க. மூத்த எம்.பி. ஒருவர் சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் சென்னை வந்திருந்தபோது நடந்த சில ரகசிய நிகழ்வுகள் தமிழக அரசியலில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தவெக உடன் பேச்சுவார்த்தை நடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பல்லாவரம் பேரணி மற்றும் முகப்பேர் மேற்கில் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற வேணுகோபால், காரில் ரூபி மனோகரன், சவுமியா ரெட்டி ஆகியோருடன் புறப்பட்டார். பின்னால் 4 கார்கள் வந்தன. கோயம்பேடு வந்ததும் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியை "தனிப்பட்ட விஷயம்" என்று அனுப்பி வைத்தார். நுங்கம்பாக்கத்தில் சவுமியா ரெட்டியையும், அண்ணா சாலையில் ரூபி மனோகரனையும் இறக்கிவிட்டார்.

ராயப்பேட்டை அருகே காரை மாற்றி வேறு காரில் சென்றார். முதலில் மீனம்பாக்கம் அருகே நட்சத்திர ஹோட்டலில் தங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு செல்லாமல், கேரள முன்னாள் முதல்வர் மகன் வீட்டில் தங்கினார். நள்ளிரவில் திமுக மூத்த எம்பி ஒருவர் அங்கு சந்தித்தார்.

இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாரோடு கூட்டணி வைப்பது? டெல்லியில் காங்கிரஸ் தலைமை தீவிர ஆலோசனை!!

பின்னர் தவெக மாநில நிர்வாகி ஒருவரும், தேர்தல் வியூக நிறுவன தலைமை நிர்வாகியும் சந்தித்து பேசினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் சந்திப்பு கோரியபோது, காலை 8 மணிக்கு அண்ணா சாலை ஹோட்டலுக்கு வரச் சொல்லப்பட்டது. ஆனால் வேணுகோபால் அங்கிருந்து கிளம்பி விமான நிலையம் அருகே ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரில் அழைத்துச் சென்றார். ரூபி மனோகரன், சொர்ணா சேதுராமன் உடன் இருந்தனர்.

மூத்த தலைவரை விமான நிலைய ஹோட்டலுக்கு வரச் சொன்னார். ஆனால் அங்கு கிரிஷ் ஷோடங்கரை மட்டும் சந்தித்தார். இதனால் அந்த தலைவர் ஏமாற்றமடைந்தார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், செல்வப்பெருந்தகை முதல்வர் ஸ்டாலினை திருமண அழைப்பிதழ் கொடுக்க சந்தித்தார். காரில் பயணித்தபோது ஸ்டாலின் கூறிய கூட்டணி கருத்துகளை வேணுகோபாலிடம் பகிர்ந்தார். திமுக-தவெக தரப்பு கருத்துகளை காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தியிடம் தெரிவித்து முடிவு அறிய திட்டமிட்டுள்ளார். அவர்கள் ஆலோசனைப்படி கூட்டணி முடிவு அறிவிக்கப்படும். அதுவரை கூட்டணி புதிர் தொடரும் என்றனர்.

இதையும் படிங்க: திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ்!! 39 தொகுதிக்கு பேரம்! ஸ்டாலின் டேபிளுக்கு சென்ற லிஸ்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share